——————————
‘’STILLNESS SPEAKS”
————————————-
”ECKHART TOLLE”
—————————–
’’ஆழ்மனம் கொண்ட அமைதியே ஆண்டவன்:
பாழ்மன புத்திப் புரவியில் -தாழ்வுற,
டொக்டொக்டொக் என்று தரையில் உலவாது
டக்கென்று வானுக்குத் தாவு’’….கிரேசி மோகன்…
—————————————–
’’விலைவாசி ஏற்றத்தில் வாத்ஸல்யம் விற்றல்:
அலைவாசிக் கண்ணனவர் ஆவின் -தலைசாய்த்து,
தன்மடியில் வைத்ததற்கு தாலாட்டாய் ஊட்டுகிறான்:
கண்மூடி சொக்குது கன்று’’….கிரேசி மோகன்….
2015-07-29
KRISHNA FOR TODAY….
—————————————–
’’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’
(இசைக்கவி ரமணனின்)பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் முயன்றது….
—————————————————————————
‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி
அங்கையேந்தும் அவதார விஷ்ணு
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1)
‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற
வானவைகுந்தனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2)
‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
உடல்சுமந்த ஆமையே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(3)
’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
நெம்பிய வராகரே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(4)
‘’தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட
தூணாடும் துரைசிங்கனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(5)
‘’வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த
அந்தணன் வாமனனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(6)
’’ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்
நாமமொன்று நடிப்புவேறு
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(7)
‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
கோபாலக் கண்ணனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(8)
—————————————
’’ஞானேஸ்வரி’’ பாவார்த்த தீபிகா(பகவத் கீதைக்கு ஞானதேவரின் உரை) படிக்கையில் தோன்றியது….
விஸ்வரூபம் கண்டு பயந்த பார்த்தனை,
எள்ளி நகையாடி, பழையபடி க்ருஷ்ணரூபம் காட்டி
சமாதானம் செய்விக்கிறார்….எனக்கென்னமோ
கேசவின் இந்தப் பசுதான் பார்த்தன்….பதி பகவான்….
பாசம் பிரேமை…..
‘’நிஜத்தினை விட்டு நிழலைப் பிடிக்க,
புஜத்தினை நீட்டுகிறாய் பார்த்தா !, -அசத்துநீ,
விஸ்வரூபம் கண்டு வெலவெலத்தாய், வந்துசெல்லும்
க்ருஷ்ணரூபத் தில்குளிர் காய்’’….கிரேசி மோகன்….
2015-07-28
இன்று ”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின்” பிறந்த நாளில் அடியேனின் மலரும் நினைவுகள்….இளமையில் ”தண்டமிழ் கொண்டல் சிதம்பரம் ஸ்வாமினாதன்” தலைமையில் ”சிந்தனைக் கோட்டம்” என்ற அமைப்பில், வாராவாரம் கவிஞர்கள் சுகி சிவம், வானவில் பண்பாட்டு நிலையத்தின் தலைவர் வக்கீல்/ கவிஞர் க.ரவி, எனது தோழன் சு.இரவி எல்லோரும் கூடி கவிகளை பாடி மகிழ்வார்கள்….இந்த அஷ்ட திக் கஜங்களுக்கு மத்தியில் அடியேன் தெனாலி ராமன் போல் அமர்வதுண்டு….அப்போது எங்கள் கிருஷ்ண தேவராயர் ”தண்டமிழ் கொண்டல்” ‘ துலங்குவெண் நீறு துனிப்பிறைக் கோடு துணைக்கரங்கள்” என்று துவங்கும் கட்டளைக் கலித்துறை பாடல் இன்னமும் என் காதில் ஒலிக்கிறது….அதே போல் ”கொத்து வேப்பிலை கைத்தலத்திடை-வைத்த நற்குங்குமச் சிலை-தொழ- வாடும் உன் மன்மதக் கலை” என்ற சுகி சிவத்தின் பாடல் எனது முதல் கவிதை அறிமுகம்….க.ரவி நன்றாக ஆழ்ந்த பொருளோடு மேடையில் கம்பீரமாகப் பேசுவார்….நாங்கள் எல்லோரும் பிற்காலத்தில் ”சுகி சிவம்” சிறந்த கவிஞராகவும், மகாகவி பாரதியாரின் தத்துப் பிள்ளை ”க.ரவி” சிறந்த பேச்சாளராகவும் வருவார் என்று பேசிக் கொள்வதுண்டு….ஆனால் ”சுகி சிவத்தை” வீராவேசமாகப் பேசும் மேடைப் பேச்சாளராகவும், ”க.ரவியை” நளினமான யதார்த்தக் கவியாகவும் ”காலமாம் மரத்தில் அண்ட -கோலமா மரத்தின் மீது -காளி சக்தி என்ற பெயர் கொண்டு -ரீங்காரம் இட்டு உலவும் ஒரு வண்டு”, பிரகருதி எங்கள் எண்ணத்திற்கு மாறாக மாற்றி அமைத்து விட்டது….வெற்றியையும் அருளியது….வாழ்க சக்தி….ஒரு கவிமன்றத்திற்காக நாங்கள் ”ஆம்பூர்” சென்றபோது, தொத்திக் கொண்ட என்னையும் மேடையில் கவிதை கத்தச் சொல்லி கட்டளைக் கலித்துறை இட்டார் ”தண்டமிழ் கொண்டல்” அய்யா…தட்ட முடியாது….காரணம் அவர் என் தம்பிக்கு தமிழ் ட்யூஷன் வாத்தியார்….வேறு வழியில்லாமல் ஆம்பூர் சத்திர தொட்டியில் குளித்தபடி ஒரு கவிதை யோசித்துப் பாடினேன்….அது….”முகிலாண்ட இமயத்து, முக்கண்ணன் இதயத்தில்-முருகாக நின்ற உமையே-அகிலாண்ட நாயகி, அகலாதென் உள்ளத்தில் அணுவாக நின்ற சுமையே- அகிலுண்ட வாசத்தின் அலையான கேசத்தின் – ஆறாத பாரத்தினால்-துகிலாண்ட இடைசற்று துவளவே நடையிட்டு-துணையாக வா காளி நீ”….என் முதல் கவிதை இது….அப்போது என் தோழன் சு.இரவி, அடிக்கடி ”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின்” உமர்கய்யாம் மொழிபெயர்ப்பை என்னிடம் மனதில் பதியும் வண்ணம் கூறுவான்….”வெய்யிலுக்கு ஏற்ற நிழலுண்டு-வீசும் தென்றல் காற்றுண்டு-கையில் கம்பன் கவி உண்டு-கலசம் நிறைய மதுவுண்டு”…..இந்த எளிமையான வரிகளின் தாக்கம் இன்னமும் எனக்குண்டு….பிற்காலத்தில் தேசிக வினாயகம் பிள்ளையின் இந்த மீட்டரில் அடியேன் க்ரேசிக வினாயகம் பிள்ளை(கவிதைக் குழந்தை) எழுதிய பாடலை பகிர்ந்து கொள்கிறேன்….
இட்டிலி சாம்பார் வடையுண்டு
இனிக்கும் டிகிரி காப்பியுண்டு
பட்டுத் துளிர்வெற் றிலையுண்டு
புகையிலை வறுவல் சீவலுண்டு
விட்டம் சுற்றும் ஃபேன் உண்டு
வீசும் ஏஸிக் காற்றுண்டு
கட்டுரை கதைகள் பலவுண்டு
கல்கி தேவன் அதிலுண்டு….கிரேசி மோகன்….
2015-07-25
—————————————
”குன்றெடுத்து ஆயரை அன்றுகாத்த கண்ண(ன்)இன்று
கன்றெடுத்து மேகத்திற் கப்பாலே, -நன்றிது,
கேசவ் மழைவருமுன், காத்திடும் வைத்தியனாய்,
ஈசனைப் போட்டாய்(வரைந்தாய்) இனிது’’….(OR)….

—————————————
”கோசகா ஏ!ராச கோபாலா!, உங்கம்மா,
தோஸயை வாத்தாளோ, தின்னுபுட்டு, -கேசவ்க்கு,
போஸளித்து, அம்மாசேய் ஆஸதோஸ பாதமுண்ண,
பாச முடன்பங்கு போட்டு’’….கிரேசி மோகன்….
————————————–
”சினமா மனைக்கொன்ற சீராயர் செல்வா!,
தின(ம்)மாலி(ஃளூட்) ஊதல் திகட்டியதோ!, -வனமாலி
வானமாலி ஆனதேன், வைகுண்டம் செல்லலாமா!,
சேணமாளல் தானே சுபம்’’….கிரேசி மோகன்….

2015-07-24
ஃலிப்கோவின் ”குமார சம்பவம்” ஒரிஜினல் தமிழாக்கம் படித்து ஒரு ஸ்லோகத்திற்கு ஒரு வெண்பா என்று முன்பு தீவீரமாக எழுதினேன்….பரமசிவம் தன் பாதியை(சக்தி) சேரும் சர்கத்தில் வெண்பாவை பாதியிலேயே நிறுத்திவிட்டார்….ஏன் என்பது அந்த முக்கண்ணுக்கே வெளிச்சம்….எழுதிய வரையில்….
——————————
காப்பு
———————-
சிவபார்வதி
—————-
சொல்லும் பொருளுமாய், அல்லும் பகலுமாய்
கல்லும் கடவுளாய் கோர்ந்திருந்து -புல்லும்
உமாமஹேச தம்பதியின் ஊக்கம் விழைகிறேன்
குமாரசம்ப வம்செய் குறித்து….(1)….2-10-2010
முருகன்
———-
உன்பிறப் புக்குமுன்னால் உண்டான சம்பவத்தை
தன்படைப்பில் காளிதாசன் தந்ததைமுக் -கண்பிறப்பே
முந்தைத் தமிழில் மொழிபெயர்த்திட மூலமே
வந்தெனக்கு கைகொடுத்து வாழ்த்து….(2)….2-10-2010
பிள்ளையார்
—————
உன்னை மறந்தால் உலகம் பழித்திடும்
என்னை, எருக்கம்பூ ஏகனே -முன்னை
கந்தன் மணமுடித்தாய், எந்தன் மொழிபெயர்ப்பில்
தந்தை மணமுடிக்கத் தாவு….(3)….2-10-2010
சரஸ்வதி
———–
செல்வம் செலவாகும், வீரம் வயதாகும்
கல்வி குறையாது குன்றாது -பல்கிப்
பெருகிட வைத்திடும் பாரதியின் நூலுக்கு
அருகிருந்து சேர்ப்பாய் அறிவு….(4)….2-10-2010
காளிதாசன்
—————
வாடாத பாக்களை வாணியின் பாதத்தில்
காடாய்க் குவித்தமகா காளிதாசா -சீடனாய்
ஏற்றென்னை நம்மன்னை சாற்றிய தாம்பூலச்
சாற்றையென் பாழ்வாயில் சிந்து….(5)….2-10-2010
சு.ரவி
——–
நண்பாநீ மந்திரியாய் நல்லா சிரியனாய்
வெண்பாநான் செய்ய வகைசெய்தாய் -பண்பால்
சிறந்தவனே இந்நூல் சுரந்திட என்னுள்
கரம்தந்(து) அளித்திடுவாய் காப்பு….(6)….14-10-2010
——————————————————————–
சர்கம்-1
———-
கரையற்று நீண்டு குடதிசையில் மேற்கில்
வரையற்ற வாரிதி வெள்ளம் -வரையுற்றுப்
பாரின் அகலத்தைப் பார்க்கும் அளவுகோல்
பாரீர் இமயமதன் பேர்….(1)….30-9-2010
கன்றாய்யிக் குன்றினைக் காட்டியம் மேருமலை
நின்று கறக்க, நிலப்பசு -என்றும்
சுரந்திடும் ரத்தினம் சஞ்சீவிப் பாலை
வரம்தரும் வெற்பை வணங்கு….(2)….1-10-2010
சீதளம் சேர்த்திடும் சந்திரன் மேலுற்ற
பாதகம் பாராட்டா பண்புடைத்தோம் -மேதினிக்கு
எல்லா சுபிட்சமும் நல்கும் இமகிரிக்கு
பொல்லாப் பனியா பொருட்டு….(3)….1-10-2010
விண்சார்ந்த அப்ஸர வல்லிகள் பூசிடும்
செஞ்சாந்து வாசத்தூள் சூழ்ந்தவுச்சி -மஞ்சோடு
பட்டுச் சிதற பரிதி ஒளிசிவக்கப்
பட்டப் பகலிலந்திப் போது….(4)….1-10-2010
கோடையில் சித்தர்கள் வாடிடாது வெண்மேக
ஆடை நிழலடியில் ஆசிரமம் -ஜாடை
கருத்தவை பெய்கையில் குளிருக்(கு) இதமாய்
சிரத்தினில் வெய்யில் சுகம்….(5)….1-10-2010
மதக்களிறின் மீதேறி மத்தகத்தில் சிங்கம்
சதையுறிய முத்துக்கள் சிந்தும் -இதையறிந்த
வேடன் அரிமா வழியை அறிவானாம்
மூடும் பனியில் முனைந்து….(6)….1-10-2010
தேர்ச்சிமிகு வித்யா தரப்பெண்கள் நேசத்தை
ஊர்ஜிதமாய், செங்காவி ஊற்றுமையால் -பூர்ஜர
ஏட்டில் எழுத எதுகை இமயம்தான்
காட்டிடும் காதல் கொடி….(7)….1-10-2010
விண்ணுறும் வெற்புகுகை வாய்திறந்து மூங்கிலதன்
கண்ணூர்ந்து புல்லாங் குழல்காற்றை -கின்னரர்தம்
கானமேல் ஸ்தாயிக்கு தான சுரம்பிடிக்கும்
ஞானம் மிகுந்தமலை நாடு….(8)….2-10-2010
ஆவலோடு கன்னத்தை ஆனை தினவெடுத்து
தேவதாரு தேகத்தில் தேய்த்திட -சீவலாக
தோலுறிந்த பட்டையில் பால்சுரக்க வாசத்தை
மேலிருந்தும் வீசும் மலை….(9)….2-10-2010
கூடிக் குலவிடும் வேடர்க்(கு) உதவியாய்
வீடாம் குகையில் விளக்கதற்கு -ஈடாக
மூலிகைத் தாவரம் மூட்டிட தீபவொளி
மாளிகைபோ லாக்கும் மலை….(10)….2-10-2010
பாரமான பின்புற(ம்)அ பாரமான கொங்கைகள்
ஈரமான பாறைப் பனிநீரும் -சேரவொன்றாய்
கின்னரப் பெண்கள்தம் இன்னலையும் பாராது
அன்ன நடைபயில்வர் அங்கு….(11)….2-10-2010
அல்பனே ஆயினும் அய்யா சரணென்றால்
சொல்பமும் பாராட்டா சான்றோர்போல் -அல்பயலை
சூரியன்கை சிக்காது சேர்த்து குகைக்கரத்தால்
வாரி அணைக்கும் வெற்பு….(12)….2-10-2010
கோனிங்(கு) இமவான் குளிர்சா மரமிங்கு
வானின் வளர்மதி வெண்கவரி -மானின்வால்
ஆகமலை ஆளும் அரசனே இங்குமலை
ஆக இருத்தல் அழகு….(13)….2-10-2010
கூச்சமுறும் கின்னரப்பெண் கூறை களைகையில்
ஆச்சரியம் கொள்வால் அதைப்பார்த்து -மூச்சிறைக்க
மேகம் குகைவாசல் போகும் திரையாக
மோகத் துணைபோகும் மஞ்சு….(14)….2-10-2010
தேவகங்கை நீர்த்திவலை, தேவதாரு தூமணம்
மேவுமயிற் தோகை மிருதுவும் -தாவிவரும்
காற்றில் கலந்திருக்க காட்டில் களைத்தவேடர்
ஏற்றடைவர் ஏகாந்த மே….(15)….3-10-2010
ஏழுரிஷி கொய்தபின்பு எஞ்சும் உயிர்மொட்டை
வாழும் கமலங்கள், வெற்படியில் -சூழும்
கதிரோனின் மேல்நோக்கும் கைக்கிரணம் பட்டு
உதிரும்முன் பூக்கும் உவந்து….(16)….3-10-2010
வேள்விப் பொருட்கள் விளைவதால், பூபாரக்
கேள்விக் குறிக்குவிடை கண்டதால் -நூல்வைத்த
நான்முகன் யாகத்தில் கோன்பெறும் பாக(ம்)இம
வான்முகம் வைத்தான் விழைந்து….(17)….3-10-2010
பித்ருக்கள் மானசீகப் புத்ரி, முனிகணங்கள்
தத்தெடுத்த நெஞ்சின் தவப்புதல்வி -உத்தமி
மேனை மணம்புரிந்தாள் மேருவின் தோழ(ன்)இம
வானையவன் வம்சம் வளர்த்து….(18)….3-10-2010
நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை
தேகநீர் ராஜனுக்குத் தோழனும், -போகரெக்கை
வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன்
மேனாள் வயிற்று மகன்….(19)….3-10-2010
தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்
துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) -அக்கினியில்
முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள்
அன்பு இமவான் அகம்….(20)….3-10-2010
உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும்
நற்சாதி செல்வ நிகழ்வேபோல் -அச்சாக
மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி
சங்கரியாய் வந்தாள் சதி….(OR)
திங்களெனத் தோன்றினாள்ச தி….(21)….3-10-2010
தெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய்
ஒளிந்த அமரர் ஒலியாய் -மலர்ந்தபூ
பார்மீது மாரியாய் பல்லுயிர்க்கும் இன்பமாம்
பார்வதி தோன்றிய போது….(22)….3-10-2010
அதிருமிடிச் சத்தம் விதூரமலை மொத்தம்
எதிரொலிக்க பூமிவாய் ஏற்று -உதிரவிடும்
ரத்தின ஜோதியாய் பெத்தவளும் புத்திரியும்
புத்தொளிகொண்(டு) உற்றார் பொலிவு….(23)….3-10-2010
சுக்கில பட்ச சசிகலைகள் போல்தினமும்
இக்குலம் வந்த இமவான்பெண் -சொக்கவைக்கும்
அங்கங் களடைந்து அக்கலைக்(கு) ஈடாக
பொங்கும் அழகுற்றாள் பூத்து….(24)….4-10-2010
உற்றார் அவளை உவந்து அழைத்தனர்
பெற்றோர் குலப்பெயர் பார்வதியாய் -மற்றோர்
சமயத்தில் தாயார் சதியைத் தடுத்தாள்
உமையே தவமேன் உரைத்து….(25)….4-10-2010
உசந்தவகைப் பூக்கள் அசைந்தும்மாம் பூவை
வசந்தருது வண்டு விரும்பும் -அசங்காது
பார்வதியைய் பார்த்திமவான் பூரிப்பான், தம்மக்கள்
யார்வதை உற்றுமிமை யான்….(26)….4-10-2010
விளக்கழகு தீபவொளி, வானழகு கங்கா
இலக்கணப் பேச்சழகு இன்சொல் -மலைக்கரசன்
பெற்றமகள் பார்வதியால் பெற்றான் பரிசுத்தம்
வற்றா வளமையுடன் வாக்கு….(27)….4-10-2010
ஓயாது தோழியரோ(டு) ஓடி விளையாடி
காயாத கங்கைக் கரைமணலில் -சேயாக
மேடைகள் செய்தும் மலர்பந்து வீசியும்
நாடகம் ஆடினாள் நன்கு….(or)
வேடமிட்டாள் வையவாழ் வொத்து….(28)….4-10-2010
போதுசரத்தில் கங்கையைப் போயடையும் அன்னம்போல்
ஜோதிர் லதையொளிரும் ஜாமம்போல் -ஓதிய
முற்பிறவி கற்றதெலாம் பார்வதியைப் பற்றியதாம்
விற்பன்னன் காளிதாசன் வாக்கு….(29)….5-10-2010
மாதவள் தோற்றம் மனதை மயக்கிய
போதுமது அல்லவே புன்மது -காதலான்
வாளிக்கும் மேலாய் வலிந்திடாது பார்வதி
வாலிபத்தைக் கொண்டாள் வளர்ந்து….(30)….5-10-2010
தூரிகையால் சித்திரம் தேர்ச்சி யுறுதலாய்
சூரியனால் தாமரையின் சோபையாய் -காரிகையாய்
யவ்வனத்தைப் பார்வதி எட்டினள் மெல்லமெல்ல
அவ்வனப்பே ஆரா அழகு…(31)….5-10-2010.
பட்டழுந்த பூமியில் பார்வதி செல்கையில்
கட்டை விரல்நகம் கொப்பளித்த -இட்ட
பதச்செந் நிறத்தால் பதுமத்தை மண்ணில்
விதித்தெடுத்துச் சென்றாள் விரைந்து….(32)….5-10-2010
அழைக்கும் சிலம்பொலியை அன்னப் பறவைகள்
கழைத்தோள் பார்வதிபால் கற்க -குழைந்தவள்முன்
தக்ஷிணையாய் தம்மன்னத் தத்திநடை தந்துவிட்டு
சிக்ஷைக்காய் ஏந்தும் சிறகு….(33)….5-10-2010
ஒயிலாய் உருண்டு ஒழுங்காய்த் திரண்ட
கயிலாயப் பெண்முழங் காலை -அயனவன்
செய்ய முயன்றதில் சேகரித்த லாவண்யக்
கையிருப்பு போச்சாம் குறைந்து….(or)
அய்ய! முயன்றதில் மெய்யின்மற் றங்கங்கள்
செய்ய அழகின்றி சோர்வு….(34)….5-10-2010
வேழத் துதிக்கை வெகுகடினத் தோலாகும்
வாழையதன் தண்டோ வெகுகுளிர்ச்சி -ஏழுலகில்
பார்வதி உற்றயிரு சேர்ந்த துடைகளுக்கு
நேர்கதியாய் ஒப்புமைகா ணேன்….(35)….5-10-2010
விடையேறும் ஈசன் மடியேறும் பாக்யம்
அடைய அருகதையிங்(கு) ஆர்க்கு -தடையேதும்
இல்லா(து) அமர்ந்த இவளின் இடையழகை
சொல்லாமல் எண்ணல் சிறப்பு….(36)….5-10-2010
இடைவஸ்த் திரத்தின் இறுகு முடிச்சின்
தடைதகர்த்(து) உந்தித் திசையில் -படையெடுக்கும்
மெல்லிய ரோமா வளியினொளி, மேகலையின்
துல்லிய ரத்தினத் தேசு….(37)….5-10-2010
மத்தியில் யாகத்து மேடைக் குறுகலை
ஒத்தயிடை கீழே உதரத்தில் -பித்தனெரி
மாறன் படியேற மூன்று மடிப்புகளால்
சாரம் அமைத்திளமை சேர்வு….(38)….5-10-2010
நூலுக்(கு) இடம்கொடாது சாலப் பரிந்திணைந்த
நீலக் கமல நயனத்தாள் -கோலயிரு
வெண்ணிற பாரங்கள் வாய்த்தயெழில் பார்வதி
எண்ணுதற்(கு) ஏற்ற எழுத்து….(39)….5-10-2010
செத்தொழிந்த மன்மதனால் செய்தயிரு கைகளும்
பித்தனவன் கண்டப் பிணைக்கயிறாய் -நித்தமும்
வாகாய் வளைக்குமவை யூகிக்க மாகவிக்கு
”வாகையினும் மென்மையாம்” வாக்கு….(40)….6-10-2010
நெட்டுயர்ந்த கொங்கைகள் நேர்த்தியால் நிற்கின்ற
வட்டக் கழுத்துமதை வளையவந்து -கட்டிடும்
முத்துமணி மாலையும், ஒத்தொன்றுக்(கு) ஒன்றழகில்
சித்தம் ஒருமிக்கும் சேர்ந்து….(41)….6-10-2010
சந்திரனில் இல்லையே செந்தா மரைவாசம்
செந்தா மரைக்கில்லை சாந்தகுணம் -செந்திரு
ஒர்கதியாய் மென்மையும் ஓதமும் மேவிடும்
பார்வதி சீர்வதனம் புக்கு….(42)….6-10-201
சிவந்த தளிர்மீது சிந்தியவெண் பூவாய்
பவழம்தன் மேல்முத்துப் பொட்டாய் -குவிந்த
அதரத்தில் பரவி அவளாய் உதிர்க்க
சிதறும் ஒளிப்புன் சிரிப்பு….(43)….6-10-2010
குயில்கொடிய யாழ்கொடிய கர்ண கடூரம்
பயில்கின்ற பார்வதியின் பேச்சால் -ஒயில்கொண்டு
வானத்(து) அமிழ்தாய் நிதானத் துடனின்சொல்
ஞானத் துடன்நல்கும் நாவு….(44)….6-10-2010
மாருதம் வீச மருள்நீல முண்டகமாய்
வேரதைப்போல் நீண்ட விழிகளின் -பாருதலை
மானுரைக்கக் கற்றாளா? மான்கற்றுத் தந்ததா
நானறியேன் நாராய ணா….(45)….6-10-2010
கையெடுத்து துரிகையில் மையடைத்து தீட்டியதாய்
பையுடைத்த ராஜநாகம் போல்நீள -மையலான்தன்
காமா யுதவில்லின் கர்வத்தை விட்டுரைத்தான்
ஆமாம் அவள்புருவம் அம்….(46)….6-10-2010
விலங்குகள் உள்ளத்தில் வெட்கம் இருப்பின்
கலங்கும் கவரிமான் கண்டு -துலங்குமவள்
கேசத்தால் தங்கள்வால் பாசம் துறக்குமாம்
ரோஷத்தால் நீங்கும் ரசிப்பு….(47)….6-10-2010
உவமைகள் யாவையும் ஓரிடத்தில் காண
அவயவங்கள் தேடி அலைந்து -சிவமய
சக்தியைச் செய்தான் சிரம்நான்(கு) உடையவன்
முக்திக்(கு) அவளழகே மெய்….(48)….6-10-2010
சஞ்சாரி நாரதர், சக்களத்தி அற்றவளாய்
பஞ்சாப கேசனுடல் பாகியாய் -பெஞ்சாதி
பார்வதியென்(று) ஆக்கும் பனிமலை மன்னனே
பார்விதி என்றார் பலத்து….(49)….7-10-2010
தும்புருவின் வாக்கில் திளைத்ததில் தந்தையும்
தம்பருவப் பெண்மணம் தாமதித்தான் -தென்புறும்
வேறுவாய்த் தீயினுள் வேள்வியவிர் பாகத்தை
தாரைவார்ப் பாரோ தெரிந்து….(50)….7-10-2010
வரம்கொட்டும் சாமி வரன்கேட்டுச் சென்றால்
தரம்பார்த்(து) இகழ்ந்திடுமோ தன்னை -வரையுற்றோன்
கேட்டு மறுத்துவிட்டால் கேலிப் பொருளாகும்
பாட்டை நினைத்துவிட்டான் பற்று….(51)….7-10-2010
அப்பனிடம் கோபித்து அப்பார்வதி தன்னுடலை
எப்போது தீயில் எரித்தாளோ -அப்போதே
அத்தனை ஜீவனையும் ஆளும் சிவபிரான்
பத்தினி பற்றொழித்தார் பார்….(52)….7-10-2010
கின்னரர், கஸ்த்தூரி, கங்கைக் கரையுயர்ந்து
விண்ணுறும் தேவமர வெற்பில்முக் -கண்ணரன்
அஞ்சு புலனாண்டு ஆனைத்தோல் பூண்டுதவம்
விஞ்சுமெழில் குன்றில் வளர்ப்பு….(53)….7-10-2010
சரக்கொன்றை சூடி, மரப்பட்டை போர்த்தி
சிரங்கால் மனோசிலை சாற்றி -விரைப்பூ
சிலாஜது மேவும் சிறுபாறை குந்தி
கலாஜடை யோந்தொண்டர் கூட்டு….(54)….7-10-2010
ஆளை உறையவைக்கும் பாளப் பனியிலரன்
காளை குளம்புகளால் கீறித்தன் -தோளுயர்த்தி
கர்வமாய் காட்டெருது கண்கலங்க கத்துதலால்
சர்வாங்கம் சிங்கம் சிலிர்ப்பு….(55)….7-10-2010
தானே தவப்பலன் ஆனோன் தனதெட்டில்
வானோர் விரும்பிடும் வேள்வித்தீ -ஏனோ
ஸமித்தால் எரியூட்டி செய்த தவத்தின்
நிமித்தம் சிவன்போக்கு நெஞ்சு….(56)….7-10-2010
தானாய்ச் சிறந்தவன், வானே வணங்கிடும்
மூணாம் விழிகொள் முதலையிம -வானே
பணிந்து தொழுது பணிவிடையைப் பெண்ணை
அணிந்திடச் சொன்னான் அழைத்து….(57)….7-10-2010
சஞ்சலம் செய்தாலும் கொஞ்சமும் மாறாத
நெஞ்சுரம் கொண்டோனே ஞானவான் -பஞ்செனப்
பார்வதி வந்து பணிவிடை செய்திட
ஓர்விழித் தீக்கண்ணன் ஒப்பு….(58)….7-10-2010
கொய்தனள் பூக்களை, செய்தனள் சுத்தமாய்
மெய்தவன் வீற்றிருக்கும் மேடையை -பெய்தனள்
தீர்த்தமும் தர்பையும்: நீர்தலையோன் தண்மதி
தீர்த்ததவள் கொண்ட தவிப்பு….(59)….7-10-2010
சர்கம் ஒன்று சுபம்
——————————————————————-
சர்கம் -2
————-
அந்த சமயம், அசுரனாம் தாரகனால்
நொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர்
முன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும்
கண்ணிருநான் கோன்முன் குவிந்து….(60)….8-10-2010
சீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு
போததி காலை புலப்படும் -ஆதவன்போல்
வாடிய வானவர்முன் கூடிய வாசலில்
பாடிடும் நூலோன் பிறப்பு….(61)….8-10-2010
நாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை
தோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து
தேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில்
தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010
(OR)
வான்முதல் பார்வரை வேய்ந்துயிர் வைத்தவனை
நான்முகனை நற்கல்வி நாயகனை -தேனமிழ்த
தேவர்கள் சூழ்ந்து திருமுகத்தில் தோத்திரமாய்
தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010
தத்துவமே, தோன்றல்முன் தேகநாமம் அற்றவரே
சத்துவமே ராஜஸமே தாமஸமே -முத்தவமே (OR)முத்தொழிலே
மூர்த்திகள் மூன்றான மூலமேவுன் காலில்கைக்
கோர்த்தோம் சரணா கதிக்கு….(63)….8-10-2010
தண்ணீர் பயனளிக்கத் திண்ணமாய் சக்தியாய்
நண்ணிய நான்முகனே நின்னருளால் -மண்ணில்
அசையும் உயிர்கள், அசையா பொருட்கள்
விசையுறச் செய்யுமுன் வித்து….(64)….8-10-2010
கற்பித்த முக்குண காரணத்தால் கொண்டீர்கள்
உற்பத்தி, காத்தருளல், உய்யுமுயிர் -தப்பித்தல்
என்றமுச் சக்திகளாய் இன்றுநீர் நின்றாலும்
அன்றசை(வு) இல்லா அயன்….(OR)
அன்றிருந்தீர் ஏகம் அடைந்து….(65)….8-10-2010
பெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க
உன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ
தந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய்
விந்தை புரிந்தாய் வகுத்து….(66)….8-10-2010
ஞாலம் படைத்தனை,கோலம் கொடுத்தனை
காலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ்
ஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு
வாழி விரிஞ்சன் விறல்….(67)….8-10-2010
காரணனே பாருக்கு, காரணம் பாராத
பூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும்
தொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய்
இல்லை உமக்கிங்கே ஈடு….(68)….9-10-2010
தானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே
காணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக
தீயாக, மண்ணாக, தண்ணீர் வளியாக
ஓயா(து) உழைத்திடும் ஓய்வு….(69)….9-10-2010
திரவப் பொருளாய், திடமாய், உருவாய்
அருவம் நிகர்த்த அணுவாய் -கருவத்து
பாரமாய் லேஸாய், புலனுணர்வாய், பூதமாய்
ஏராள மானஏ கா….(OR)
ஏராளம் உந்தன் எடுப்பு….(70)….9-10-2010
ஓங்கார மூன்றுசுர உச்சரிப்பால் தோன்றிடும்
ரீங்கார வேத ரகசியத்தால் -ஆங்காங்கு
செய்திடும் யாகமும் சொர்காதி பேறுகளும்
பெய்திடும் தேவரீர் பாங்கு….(71)….10-10-2010
காட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி
சாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு)
அகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே
சுகப்படுவீர் ஆன்மனில் சேர்ந்து….(72)….10-10-2010
விண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும்
தென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து)
அயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக்
குயவன் களிமண் கரம்….(73)….10-10-2010
யாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும்
தேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர்
தேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர்
நேர்ந்ததுவாய் நின்றீர் நினைத்து….(74)….10-10-2010
வரஸ்துதியாய் வேண்டாது வாக்கில் பொருளில்
சுரஸ்துதியின் சீரால் சிலிர்த்து -சரஸ்வதி
ஆசை மணாளன் ஆர்வம் மிகவுற்று
பேசப் புகுந்தான் பதில்….(75)….10-10-2010
வேதம் வடித்ததால் ஆதிகவி ஆனவன்
போது கமலமெப் போதும்வாழ் -நாதனுரை
நான்கு முகத்தினால் நான்கு முகமாக
வான்குவிந்தோர் காதில் விருந்து….(76)….11-10-2010
வண்டி நுகத்தடியாய் வாய்த்தநீள் கைகளும்
அண்டர் பதவியும் ஆளுமையும் -கொண்டிருந்தும்
கூடியிருந்து இங்கு குறைவற்ற நீங்களென்
வீடடைந்தீர் வாழ்க வரவு….(77)….11-10-2010
காயும் முழுநிலவும் கண்சிமிட்டும் தாரகையும்
மேயும் பனித்திரையால் மங்குதலாய் -நீயுமுன்
கூட்டமும் கொண்டஇவ் வாட்டமேன் வஜ்ஜிரா
பாட்டன் எனக்குப் பகர்….(78)….11-10-2010
விருத்திரன் மாய வரைகள் சாய
நிறத்தினால் வானவில் நாண -கரத்திருந்த
வச்சிரம் வாடி வளைந்துமுனை தேய்ந்துவெறும்
குச்சியாய் ஆனதேன் கோன்….(79)….11-10-2010
மந்திரத்தால் கட்டுண்ட மாசுணமாய்க் கைப்பாசம்
தன்திறம் விட்டுத் தவழ்வதேன் -உன்தரப்பு காரணம் என்னவோ கார்முகில் காவலா
வாருணா கூறுவாய் விட்டு….(80)….11-10-2010
சுபாவமாய் கையிருக்கும், சத்ருவைக் கொல்லும்
அபார கதாயுதம் அற்ற -குபேரா
கிளையிழந்து கொம்பாய் கரதலம் கூனி
களையிழந்தீர் கூறும் கலி….(81)….11-10-2010
துள்ளிக் குதித்தவுணர் தொல்லை தகர்த்தவரைக்
கொல்லும் தண்டத்தை கேலிசெய்தல் -கொள்ளித்
தடியால் தரைதனில் கோடிடுதற்(கு) ஒத்த
படியாம் எமனேன் பயம்….(82)….11-10-2010
வீசுமொளி போனதால், தேசு குறைந்ததால்
கூசிடாது பார்க்க குளிர்ச்சியாய் -பூசிய
சீலையின் ஓவியமாய் சூரியர்காள் பன்னிருவர்
வேலையற்றுக் கொண்டதேன் வேர்ப்பு….(83)….11-10-2010
துள்ளும் நதிவெள்ளம் மெல்ல எதிர்திசையில்
செல்லத் தடையென்று சொல்லலாம் -கொல்லும்
வருத்தம்தான் என்ன? மருத்துக் களேழும்
சிறுத்ததேன் சீறாது சோர்ந்து….(84)….12-10-2010
ஹூங்காரம் செய்யும் உருத்திரர்காள், வார்சடை
தாங்காது தொய்வதேன் தண்மதியால் -ஏங்காணும்
விண்ணிருந்தும் வீரமற்று வையத்தைப் பார்க்கிறது
கண்ணிரெண்டும், ஏனிக் குனிவு….(85)….12-10-2010
பொதுவிதியை போக்கும் புதுவிதியைப் போலே
இதுவரை ஆண்ட இடத்தை -எதிரிகள்
உட்புகுந்து கொண்டனரோ, உங்களுயர் அம்பரம்
முட்புகுந்த(து) ஏனோ மொழி….(86)….12-10-2010
தோற்றுவிக்கும் என்னை துயருலகை சூழுங்கால்
தேற்றுவிக்கும் தாங்களேன் தேர்ந்தெடுத்தீர் -சாற்றிடுவீர்
உள்ளதை உள்ளபடி பிள்ளைகாள் போட்டுடைப்பீர்
தெள்ளத் தெளிவாகத் தான்….(87)….12-10-2010
அண்டிய தென்றலால் ஆடிடும் முண்டகம்போல்
கொண்டகண்கள் ஆயிரத்தால் அண்டர்கோன் -விண்டினன்
தேவ குருவிடம் தக்கபதில் தோலுரித்து
பூவன் பழமாய்ப் பெற….(88)….12-10-2010
இந்திரன்தன் ஆயிரம் கண்களைக் காட்டிலும்
தன்திறனாய் தர்மார்த்த தேசுற்ற -மந்திரன்
தேவ ப்ரஹஸ்பதி சேவித்துச் செப்பினார்
நாவன் அயன்முன் நடப்பு (OR) நிகழ்வு….(89)….12-10-2010
ஒவ்வோர் உயிரிடத்தும் ஊடுறுவும் வல்லோனே
எவ்வா(று) அறியா(து) அளப்பீர்நீர் ! -அவ்வாறே
தாங்களே சொன்னவண்ணம் நாங்கள் துயரடைந்தோம்
தீங்குளத் தோரால் தவித்து….(90)….12-10-2010
விண்ணுச்சி தோன்றும் விபரீத தூமகேது
தன்னிச்சைத் தீயவன் தாரகன் -முன்னுச்சி
உம்மைக் குளிரவைத்து உற்றவர கர்வத்தால்
பொம்மையாய் ஆனோம் பயந்து….(91)….12-10-2010
பாவியவன் ஊரில் பரிதா பமாய்க்கதிரோன்
வாவியுள்ள அல்லிமட்டும் வாழ்வதற்கு -தேவையான
வெய்யிலைத் தந்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க
கையினால் பொத்துகிறான் கண்….(92)….12-10-2019
பாராது பக்ஷங்கள் பாரபக் ஷத்தோடு
தாரா சுரனூரில் தொண்டாற்றும் -தாரகேசன்
தாரு வனமழித்த தாணு தலையெழுத்தால்
சேரும் கலைக்கில்லை ஊறு….(93)….13-10-2010
மாற்றானாம் தாரகன்தன் மாளிகைத் தோட்டத்தில்
நேற்றலர்ந்த பூவுக்கும் நோவின்றி -காற்றானான்
வேர்வைக்கு மட்டும் வளியாகி வீசுதலால்
பார்வைக்குக் கைவிசிறி பார்….(94)….13-10-2010
ஆறு ருதுக்களும் வேறு வழியின்றி
தாருகன் தோட்டத்தில் தொங்கிடும் -நூறுவகைப்
பூக்களைக் காத்துப் பராமரிப்பு செய்திடும்
ஆட்களாய் ஆயினர் அங்கு….(95)….13-10-2010
முத்தை பவழத்தைப் பொத்தி ஜலத்திற்குள்
நித்தம் அவைமுதிர நோன்பிருந்து -கத்தும்
கடலரசன் தாருகன் காலடியில் கெஞ்சி
அடபரிசாய் அந்தோ அளிப்பு….(96)….13-10-2010
வாசுகியும் தோழர்களும் வீசுமொளி ரத்தினத்தால்
நீசனவன் மாளிகையில் நள்ளிரவில் -தாசியென
தீபங்கள் தாங்கித் திரிகின்றார் தேவனே
பாபமென் செய்தோம் புகல்….(97)….13-10-2010
கற்பகத் தாருதரும் அற்புதங்கள் யாவையும்
அற்பனவன் ஆட்சி அருள்வேண்டி -நிற்பவனாம்
இந்திரனே தாரகன் இன்னல் தவிர்த்திட
தந்தருளி ஆனான் தொழும்பு….(98)….13-10-2010
காட்டிடும் அன்புக்குக் கட்டுப் படாதவன்
வாட்டு கிறான்மூ உலகத்தை -போட்டு
அடியாத மாடு படியாதாம் என்று
முடிவாகச் சொன்னான் முனி….(99)….14-10-2010
இந்திர லோகத்து சுந்தரிகள் வாஞ்சையாய்
வந்து தளிர்களுக்கு வேதனை -தந்திடாது
நேசமொடு கொய்திடும் நந்தவனம் தாரகனின்
நாசத்தால் நாணுது நைந்து….(100)….14-10-2010
மூச்சுவிடும் காற்றளவு வீச்சடக்கி, தம்கண்ணீர்
பூச்சொரிய தேவகுலப் பாவையர் -கூச்சமொடு
தாமரைக் கைகளால் தாரகன் தூங்கிட
சாமரம் வீசி சளைப்பு….(101)….14-10-2010
இரவிதன் தேரின் புரவிக் குளம்பு
உரசுமம் மேரு சிரசை -கருவியவன்
பேர்த்தெடுத்து மாளிகைப் பூங்காவில் குன்றுகளாய்ப்
பார்ப்பதவன் கேளிக்கைப் போக்கு….(102)….14-10-2010
அட்டதிக் கஜங்களின் கொட்டும் மதஜலம்
மட்டுமே கொண்டதால் மாகங்கை -குட்டையாம்
பொற்றா மரைப்பயிர் போகமவன் வாவியில்
குற்றப்பேர் மந்தா கினிக்கு….(103)….14-10-2010
அமானுஷ் யமாக அவன்வந்தால் போகும்
சமாச்சாரம் ஆகுமே சோகம் -விமானத்தில்
ஆதலால் தேவர்கள் பூதலம் சுற்றிடும்
காதலுக்கு வந்ததாம் கேடு….(104)….14-10-2010
தீயவன் மூலம் தருமவிர் பாகத்தை
தீயவன் தாரகன் தேவரெம்முன் -மாயமாய்
வேள்வியில் அக்கினிக்கு வாரிசாய் வந்துண்டு
தோல்விக்(கு) அளிப்பான் தபஸ்….(105)….14-10-2010
மிச்சைஸ்வர் யத்தோடு மந்தரம் சுற்றுங்கால்
இச்சையாய் இந்திரன் ஈட்டிய -உச்சைச்
ரவஸ்ஸை அபகரித்த ராட்ஷஸனால் காப்பு
கவஸம் இழந்தாற்போல் கோன்….(106)….14-10-2010
கபவாத பித்தம் கலந்திடத் தோன்றும்
அபவாத மாய்சன்னி பாதம் -உபவேதம்
தீராப் பிணியென்ற தொல்லை யிதற்கீடாம்
தாரா சுரன்செய்யும் தீங்கு….(107)….15-10-2010
வெகுவாக நம்பிய விஷ்ணுவின் ஆழி
புகவாகு இல்லாத பாறை -நிகர்மார்பில்
மோதியதால் உண்டான ஜோதியதால் ஆரமாய்
க்ராதகன் கொண்டான் கழுத்து….(OR)
பாதகன் கொண்டான் புனைந்து….(108)….15-10-2010
அயிரா வதமஞ்சும் அவ்வரக்கன் ஆனை
எயிறால், இமையாதோன் என்றும் -உயிராய்
வலம்வரும் புஷ்கரா வர்த்தக மஞ்சில்
ஜலம்தெறிக்க முட்டும் சிதைத்து….(109)….15-10-2010
கர்மத் தளையகற்றி கர்பப் பிணியறுக்க
தர்மம் தவதானம் தோன்றலாய் -மர்ம
பலமுடைய தாரகன் பாதகம் தீர
தளபதியை தேவர்க்குத் தா….(110)….15-10-2010
பற்றிச் சிறையில் பகைவனால் பூட்டிய
வெற்றித் திருமகளை விண்ணரசன் -பெற்றிடவோர்
ஆணைப் படைத்திடுவீர் சேனைத் தலைவராய்
வானை வலுப்படுத்து வீர்….(111)….15-10-2010
முனிவனது பேச்சு முடிந்தது கண்டு
கனிவுடன் மேலே கமலன் -தணிவுடன்
கூறியது மேகத்தின் கர்ஜனைக்குப் பின்வரும்
மாரியதை வெல்லும் மகிழ்வு….(112)….15-10-2010
நேருதல் நிச்சயம் நீங்கள் நினைப்பதென
ஆறுதல் சொன்னோன் அதுநிகழ -மாறுதலாய்
சேனைத் தலைவன் ஜனிக்கப் படைப்பது
தானல்ல என்றான் தாழ்ந்து….(OR)
நானல்ல என்றான் நகைத்து….(113)….15-10-2010
நட்ட மரமது நச்சுமர மாயினும்
வெட்டுதல் வைத்தோன் வழியன்று -கெட்டவன்
தாரகன் பெற்ற வரமளித்த நானவன்
தீரவழி செய்தல் தவறு….(114)….15-10-2010
மூவுலகைத் தீக்குள் முழுகவைக்கும் வேள்வியை
தீவிரமாய் செய்தனன் தாரகன் -தாவரம்
என்றதும் தந்தேன் தவத்தைத் தடுத்திட
அன்றியவன் நன்மைக்காய் அன்று….(115)….17-10-2010(விட்டுப் போன வெண்பா)
போராளி யாய்யுத்த பூமியில் பூரிக்கும்
தாரா சுரன்திகைக்கும் தோள்வலியன் -வேறாள்
தரணிமிசை உண்டோ, திருநீல கண்டன்
பரமசிவன் மூலம் பிறப்பு….(116)….16-10-2010
அறியாமைக்(கு) அப்பால் அறிவுக்(கு) அரணவ்
இறையொளியை ஆரறிவர் இங்கு -அரியோடு
அடநானும் அவ்வீசர் ஆழமுச்சி தேடித்
தொடயேகி அன்றடைந்தோம் தோற்பு….(117)….16-10-2010
காந்தம் இரும்பைக் கவருதலாய், கைலாச
சாந்தனை யோகத்தில் சார்ந்தனைஏ -காந்தனை
பார்வதியின் தோற்றப் பொலிவதால் ஈர்த்திருவர்
சேர்வதில்தான் தேவர்க்கு தீர்வு….(118)….16-10-2010
நாங்கள் வெளிப்படுத்தும் நல்லாக்க ஆற்றலை
தாங்கி வளர்க்கும் திறனுடையோர் -ஈங்கிருவர்
சம்புவதன் சக்தி சதியேற்க வல்லவள்
நம்புவது நான்படைப்பில் நீர்….(119)….16-10-2010
நெற்றி விழியோனின் நீலக் கழுத்தனின்
வெற்றிப் புதல்வனே வானமகளிர் -கற்றைக்
சிகைவிரித்துக் கொண்ட சிறையிருந்து மீட்டு
பகையழிக்கும் சேனை பொறுப்பு….(120)….17-10-2010
பகர்ந்த படைக்கும் பிரமன் மறைந்து
நகர்ந்தான் சுரர்களை நீங்கி -தகுந்த
உபாயம் கொடுத்த உறுதியில் சொர்க
அபாயம் அகன்றது அன்று….(121)….17-10-2010
சம்புவை ஈர்த்திடும் சாமர்த் தியமுற்ற
அம்புவில் மாறன் அதிசியத்தை -நம்பியகோன்
இந்திரன் நெஞ்சால் இருமடங்கு வேகத்தில்
வந்திடச் சொன்னான் விரைந்து….(122)….17-10-2010
ரதிவளையல் காயம் பதிவுசெய்த காயம்,
நதிவளைவாய் சேர்ந்திருக்கும் நங்கை -நுதல்வளைவாய்
மன்மதன் வில்லேந்தி மாம்பூ வசந்தனுடன்
விண்முதலோன் முன்பு வரவு….(123)….17-10-2010
சர்கம் இரண்டு சுபம்
—————————-
—————————————————————————
சர்கம்- மூன்று
——————
ஆரால் பயனோ அவரன்றி வேறாளைப்
பாரான் எஜமான் பழகிடினும் -நூறாறு
நானூறு கண்களால் நோக்கினான் மன்மதனை
வானூறும் நட்பை விடுத்து….(124)….18-10-2010
”அமரிங்கே” என்றன்பாய் ஆசனமும் தந்து
சமமரி யாதையை செய்ய -அமரர்கோன்,
புல்லரித்த புஷ்பபாணன் போற்றியெஜ மானரிடம்
சொல்லலுற்றான் சொந்தச் சரக்கு….(125)….18-10-2010
மூவுலகில் தாங்கள் முடிக்க நினைத்ததை
ஏவுகணை என்மூலம் எய்திடுவீர் -காவலனே
ஏனைய பேரிருக்க என்னை அழைத்தனையும்
ஆணை எனக்கு அருள்….(126)….18-10-2010
வானப் பதவி விரும்பித் தவமியற்றும்
ஈனப் பிறவியார் இன்றுரைப்பீர் -பாணம்
தொடுத்தயென் வில்லால் தடுத்தவனைக் காமப்
படுக்கையில் வீழ்த்துகிறேன் பார்….(127)….18-10-2010
பிறவிப் பிணிக்கஞ்சி பேரின்ப மோட்ச
வரவுக்(கு) உமைமறந்த வீணன் -கருவத்தை
நோக்க நுதலை நெறிக்கின்ற நங்கையர்
பார்க்க மறப்பான் பரம்….(or)
தாக்கத் தவிர்ப்பான் தவம்….(128)….18-10-2010
சுக்கிராச் சாரியார் சொன்னவுப தேசத்தால்
அக்கறையாய் தர்மார்த்தம் ஆழ்ந்தவனும் -உக்கிரமாய்
பொங்கும் புனல்கரையைப் பேர்த்தலாய் ஆசையை
அங்கனுப்பக் கொள்வான் அழிவு….(129)….19-10-2010
புத்தி புகுந்தவள் பத்தினியே ஆனாலும்
சித்த சபலத்தில் சேர்த்தவளை -அத்தனுன்மேல்
இச்சையுறச் செய்வேன் இழுத்தணைக்கச் செல்லுமவள்
அச்சமட நாணம் பயிர்ப்பு….(130)….19-10-2010
காமுகரே, குற்றத்தால் காலில் விழுந்தபின்னும்
தீமுகம் காட்டிய தேவதையார் -பூமுக
வாளியால் தேகத்தை வாட்டித் தளிர்படுக்கை
நாளுமவள் நாடவைப்பேன் நான்….(131)….19-10-2010
வச்சிரம் கண்கள் வளரட்டும் ஓய்வெடுத்து
இச்சரப் பூக்களை எய்திட -அச்சுறுத்தும்
உன்னெதிரிக் கூட்டம் உதடு துடித்துறுமும்
பெண்ணெதிர்க்க ஓடும் பயந்து….(132)….19-10-2010
பூவென்(று) அலட்சியமாய்ப் பாராய், எனதுகணைப்
பூவொன்றால் அப்பினாக பாணிக்கே -நோவென்ற
உள்ளக் குலைவை உதிர்ப்பேன் வசந்தனுடன்
சொல்லித் தெரிவதில்லை சூது….(133)….19-10-2010
மடித்து தொடையில் மிடுக்காய்ப் பதித்த
அடித்தா மரையை அகற்றி – வெடுக்கென
ஆசன பீடத்தை அங்கீ கரித்தூன்றி
பேசினான் மாறனைப் பார்த்து….(134)….19-10-2010
உச்சரித்தக் கீர்த்திகள் நிச்சயமே நண்பனே
அச்சுறுத்தல் நீங்கி அகமகிழ்ந்தேன் -வச்சிரத்தை
ஒத்தவனே, உன்படைதான் சித்தமகா யோகியையும்
தத்தளிக்க வைத்திடும் தைத்து….(135)….19-10-2010
பூமியை சேடன் பொறுத்தல் திறன்கண்டே
நேமியன் நாடினான் நீள்துயில் -பூமய
வில்லாளி நண்பா விறலில் எனையொத்த
வல்லான் உனக்கோர் வழக்கு….(OR)
வல்லானுன் வாளிக்கு வாய்ப்பு….(136)….19-10-2010
காளையார் மீது கணைவிட்(டு) அவர்தவச்
சோலையை சாய்ப்பதாய் சொன்னதற்கு -வேளைபார்
வந்தது மன்மதா நொந்திருக்கும் எங்களின்
அந்தரங்க ஆசி அதற்கு….(137)….20-10-2010
ஆவலாய் தேவர்கள் அவ்வீசன் சேய்சேனைக்
காவலாய் வாய்த்திடக் காத்துள்ளார் -ஏவுவாய்
ஓரம்பால் வேதங்கள் ஆரம்பம் ஆகிடும்
வேரின்பால் ஆசை விதைத்து….(138)….20-10-2010
காரியன் நான்முகன் காரணன் ஈசனின்
வீரியம் தாங்கும் வலுவுடையாள் -கூறினன்
பார்வதி என்றே புலனடக்கம் பெற்றவளால்
பார்அவதி உந்தன் பணிக்கு….(139)….20-10-2010
வெற்பரசன் தந்தை விடுத்ததோர் உத்திரவால்
சொற்ப சிசுருஷை செய்கின்றாள் -சிற்பமாய்
உச்சி சிகரத்தில் உள்ளாழ்ந்த ஈசர்க்கு
எச்சரிக்கை அப்ஸர ஏவு….(140)….20-10-2010
முப்புறம்மண் சூழ்ந்தும் முளைக்க விதையதற்கு
அப்புவின் தேவை அவசியம்போல் -ஒப்பறியா
பார்வதியின் தோற்றப் பொலிவுதவ முற்றுமென்றால்
நேருவதற்(கு) ஆரம்பம் நீ….(141)….21-10-2010
சிந்தையில் தோன்றியும் செய்ய முடியாத
அந்தவோர் காரியத்தை ஆக்குபவன் -விந்தையாம்
அச்சிவன் மீதுமலர் அம்பெய்தி கீர்த்தியின்
உச்சிக்குப் போவாய் உயர்ந்து….(142)….21-10-2010
கொல்வதில்லை ஆனாலும் வில்வதையால் ஆனந்தம்
கொள்வதனால் காமனுனைக் கூப்பிடுவர் -நல்விதமாய்
யாசிக்கும் எங்களுக்காய் யோசிக் காதுசெய்வாய்
பூசிக்கும் பார்மூன்றும் பார்….(143)….21-10-2010
நாடாது போயினும் நண்பன் வசந்தனுன்
னோடேதான் நிற்பனென நம்புகிறேன் -ஆடாத
மொட்டனைய அக்கினியை மூண்டு வளர்த்திட
கட்டளைக்காய் காக்குமோ காற்று….(144)….22-10-2010
அனங்கன் அதைக்கேட்(டு) இணங்கி சுரர்கள்
இனங்கோனின் ஆணையை ஏற்று -வணங்க
அயிரா வதமடக்கும் ஆஜானு கையை
தயவோடு வைத்தான் தலை….(145)….23-10-2010
பயந்த ரதிவசந்தன் பின்தொடர காமன்
உயர்ந்த இமயம் அமைந்த -நயனனுதல்
ஆண்டவன் ஆசிரமம் மாண்டாலும் வெற்றியை
வேண்டியவன் சென்றான் விரைந்து….(146)….23-10-2010
சிவத்தோடு சேர்ந்தங்கு சித்தம் ஒருமித்த
தவத்தோர் தரத்தை தகர்க்க -அவித்தைக்(கு)
இசைந்த களத்தை இயற்றுவோன் ஆனான்
வசந்த ருதுவாய் வனத்து….(147)….23-10-2010
மாற்றான் மனைவிரும்பும் மூடனால் பத்தினி
ஆற்றாமை கொள்ளும் அவலமாய் -மாற்றத்தால்
விண்முகம் பானு வடக்கேக தென்திசை
தன்முகம் கொண்டாள் துயர்வு….(148)….23-10-2010
தளிர்பெண் சிலம்புத் திருவடி பட்டு
துளிர்க்கும் அசோகமரம் திடுமென்(று) -அளித்த
வசந்தத்தால் தன்னியல்பை விட்டு மலர்ந்து
இசைந்ததாம் பூக்கள் இறைத்து….(149)….24-10-2010
கொய்தமாம் பூவால் கணைக்கு சிறகமைத்து
செய்திடச்சில் வண்டுகள் சென்றதை -மொய்த்ததைப்
பார்க்கையில் மன்மதன் பேரையப் பாணத்தில்
சேர்க்க அமர்ந்ததாய் சாக்கு….(150)….24-10-2010
கனகமாய்க் கொன்றை குவிந்தும் ரசிகர்
மணமற்ற தாலே மறுப்பர் -குணமுற்றும்
கொண்டவனை நான்முகன் கொள்வதில்லை தன்படைப்பில்
கண்டனம்போல் காளிதாசன் கூற்று….(151)….24-10-2010
வனமென்ற நங்கை வசந்தனுடன் சேர்ந்த
கணத்தில் பலாசக் கிளையில் -மினுமினுத்த
கூன்பிறை மொட்டுக்கள் கீறும் நகமாக
காண்பது காளிதாசன் கண்….(152)….24-10-2010
மஞ்சாடி பூக்களவள் செஞ்சாந்து, சுற்றிவரும்
அஞ்சாத வண்டுகள் ஆங்கேபொட்(டு) -அஞ்சனம்
மாந்தளிர் வாயதரம் மேவிய செந்நிறத்தால்
காய்ந்த மதுஸ்ரீ கதிர்….(153)….24-10-2010
பருவருது கண்டு முரளமர பூக்கள்
விரவுமது கண்ணிலே வீழ்ந்தும்-திரளும்
இலையுதிர் காற்றுக் கெதிராக ஓடும்
கலைமான்கள் கொள்ளும் களிப்பு….(154)….25-10-2010
தீந்தமிழ்க்(கு) ஈடாக ஆண்குயில் கூவுதல்
மாந்தளிர் உண்டதால் மட்டுமன்று -தான்திமிர்
பூரிப்பும் கர்வமும் பெற்றவளை மாற்றிட
கோரிக்கை காமன் குரல்….(155)….25-10-2010
குளிர்பனி சென்றதால் கிம்புருடப் பெண்கள்
தளிரிதழ் தூயவெண் தேகம் -ஒளிர
நுதற்பொட்டில் கன்னக் கதுப்பு வரியில்
வெதுவெதுப்பாய் வெய்யிலின் வேர்வு….(156)….26-10-2010
அகால வசந்தத்தால் அவ்வனம் உற்ற
தகாத வனப்பால் திகைத்து -எகாலமும்
உண்மையில் வாழ்வோர் உறுதி குலைந்திடும்
தன்மையை மாற்றத் தவிப்பு….(157)….26-10-2010
நாணேற் றியதனுசு நட்புரதி சேர்க்கையில்
தானேற்ற காரியத்தைத் தீர்த்திட -கானேகி
நாடிட மன்மதன் ஜோடிகள் காதலாய்க்
கூடினர் இன்பம் கொழித்து….(158)….26-10-2010
ஆண்வண்டு காதலியோ(டு) அண்டா மலரமர்ந்து
தேனுண்டு சொக்கிட தேடிவந்த -மானொன்று
தீண்டியதால் கண்மூடி தாமதிக்கும் பெண்மானை
சீண்டியதாம் கொம்பால் சொரிந்து….(159)….26-10-2010
துதிக்கையால் தாமரைத் தேன்கலந்த நீரை
மதக்களிறுக்(கு) ஈந்து மடப்பிடி -குதிக்குமாம்
சாதகமும் தானுண்ட செங்கமலப் பூங்குருத்தை
பாதியாக்கி பத்தினிக்கு பங்கு….(160)….26-10-2010
காட்டுமலர் கள்ளுண்டு கண்சுழல கிம்புருட
வீட்டுமனை பாடுகையில் வேர்த்ததனால் -தீட்டிய
பூச்சழிய கேள்வனவன் பாட்டுக்(கு) இடையிடையே
கூர்ச்செறிந்து முத்தமிட்டான் காத்து….(161)….26-10-2010
கொத்துமலர் கொங்கை, கொடியிடை, கொங்குதளிர்
முத்தமிடும் வாயிதழ் மங்கையவள் -சுத்தும்
கரமாம் கிளையால் மரக்கா தலர்க்கு
அறமாய் அணைப்பு அளிப்பு….(162)….26-10-2010
அங்குலவும் அப்சர சங்கீதம் கேட்டாலும்
சங்கரர் யோகத்தை சார்ந்திருந்தார் -தங்களது
தாவும் மனமதை தடுத்தாண்டு கொன்றவர்மேல்
ஏவும் கணைகள்தான் ஏது….(163)….26-10-2010
கொடிமனை வாசலில் கோலூன்றி நிற்கும்
விடையன் விரலைவாய் வைத்து -அடையாள
முத்திரை காட்டி முனிவோரை எச்சரித்தான்
நித்திரையை நீக்கும் நினைப்பு….(164)….26-10-2010
அசையா மரங்கள் அசலனமாய் வண்டு
பசையிட்ட வாயாய் பறவை -விசையுறா
ஊர்வனவாய், அவ்வனம் ஏறவனின் ஆணையால்
ஓர்வரைவாய் நின்றது ஓய்ந்து….(165)….26-10-2010
சுக்கிரன் வாழ்கின்ற திக்கினில் செல்வதால்
விக்கினம் என்று விலக்கலாய் -முக்கணன்
புன்னை வனத்துள் புகுந்தனன் நந்தியின்
கண்ணை அனங்கன் கடந்து….(OR)
கண்ணுக்(கு) அனங்கன் குனிந்து….(166)….26-10-2010
காலனைக் காணாது காமன் வரிப்புலித்
தோலனை தேவதாரு தண்டடியில் -கோலமாய்
வென்று புலனடக்கி வீற்றமுக் கண்ணனை
சென்று நெருங்கினன் சாவு….(167)….27-10-2010
வேராய் விறைத்து விருட்சமாய் நீண்டுயர்ந்து
நேராய் அமர்ந்தார் நமச்சிவாயம் -வீரா
சனத்தில், விழுதாய் சிவந்தயிரு கைகள்
பிணைக்கமடி அல்லிப் பிறப்பு….(168)….27-10-2010
நாகத்தால் கட்டிய நீள்முடியும், நஞ்சுண்ட
தாகத்தால் காரொத்த தொண்டையால் (OR)
தாகத்தால் கண்டத்து தேஜசது -தேகமான்
தோலைக் கருப்பாக்க தோன்றினன் ருத்திராக்ஷ
மாலையை காதில் முடிந்து….(169)….27-10-2010
நெறியா புருவம் நகரா இமைகள்
புரியாதோர் அஞ்சிடும் பார்வை -சரிவாக
தேசொளி மூவிழியால் நாசி நுனியினை
ஈசனார் நோக்கு இருப்பு….(170)….27-10-2010
மின்னலிடி இல்லாத மேகமாய், பொங்கலை
இன்னதென்(று) அறியாத தண்ணீராய் -விண்ணென
காற்றற்று நிற்கும் குத்து விளக்காயுள்
காற்றடக்கி காட்சி கொடுப்பு….(171)….27-10-2010
முண்டக நூலினை மிஞ்சிடும் மென்மையும்
கண்டுமதி மங்கும் கிளரொளியும் -மண்டையின்
உச்சிக்கண் தோன்றும் ஒளிக்குவமை தந்தமர்ந்தான்
சச்சிதா னந்த சிவன்….(172)….27-10-2010
ஒன்பது வாயிற்கண் ஓடாது யோகத்தால்
தன்பதுமை நெஞ்சை தன்னகத்துக் -கண்புதைத்து
ஆன்றோர் உணர்ந்த அழிவற்ற ஆன்மனில்
தாந்தோன்றி தன்னுள் திளைப்பு….(173)….27-10-2010
எண்ணத்தால் கூட எதிர்க்க இயலாமுக்
கண்ணத்தன் கோலத்தால் காமனஞ்சி -என்னத்தை
செய்வதென்று சோர்வுற, சொல்லாமல் வில்லம்பு
மெய்வசத்தை நீங்கி மணல்….(174)….27-10-2010
உற்சாகம் குன்றி உருக்குலைந்த காமனுக்கு
நற்சேதி கூறலாய் நேர்ந்தது -தற்செயலாய்
பொற்சிலை பார்வதி பாங்கியிரு பெண்தொடர
சிற்சபையில் வைத்தாள் சிலம்பு….(175)….28-10-2010
ரத்தினப் பூஅசோகம் முத்தாக சிந்துவாரம்
பத்தரை மாத்துப்பொன் கர்ணிகாரம் -அத்தனை
போதும் அணியிருந்த போதும் வசந்தத்தின்
போதணிந்தாள் பார்வதிஅப் போது….(OR)
போதணிதல் பார்வதியின் போது….(176)….28-10-2010
மலைப்பூங் கொத்தால் மளுக்கென்று சாயும்
தளிர்க்கொடி போலத் துவண்ட -மலைப்பெண்
செங்கதிர் வண்ணத்தில் சேலையில் போந்துகனக்
கொங்கையாள் ஆனாள் கொடி….(177)….28-10-2010
நாகமென மாலையை நுண்ணிடையில் -மேகலையாய்
பத்திரமாய் வைத்தனன், பார்வதி சாயுமதை
தத்தளித்
“ஞானேஸ்வரி “….விஸ்வருபம் பார்த்து மிரண்ட பார்த்தன் “நமஸ்காரம் நமஸ்காரம் ” கூவுதல் ….
“சமத்கார விச்வரூபம் சந்தித்தேன் போதும் ,-நமஸ்காரம் என்றும் நினக்கு : -தமஸ்க்காக -சத்வம் ரஜஸாக, சாமர்த்தியம் காட்டிட ,-தத்துவத் திற்குநமஸ் தே “….கிரேசி மோகன் ….
புலித்தோல் போர்த்திய பசு பதி….
’’புலிவாய் அகப்பட்ட புல்லின் பசிக்கு,
புலிவாய்ப் பளித்தந்தப் புல்லைக் -களிப்பாய்
புசிக்குமே, ஆதலால் பக்திப் பசியில்,
வசிப்போமே அண்ணா வரை’’….கிரேசி மோகன்….
திடவுளத் தோடலைய தெய்வம், -வடிவெடுத்து
தேசிகனாய் வந்தளிக்கும் ,ஆசி , அனுபூதி,
——————————————
”வாசல்யத் தாம்பினால் வாசுதே வன்மாடை
சேர்த்தணைத் துக்கொள்ளும் செய்கையின், -தாத்பர்யம்,
”தாயைப்போல் பிள்ளை”, தரணிக்(கு) உணர்த்தவே,

”தூங்கும்முன் தோன்றியது, தூக்கம் எதற்காக,
ஏங்குமுடற் கென்றால் எழவுஜடம், -தாங்கிடும்
ஆன்மாவுக்(கு) ஏது அசதி, எழுந்திடும்
”நான்”யெனக் கென்னும் நரி”….கிரேசி மோகன்….
2015-07-21
‘கூப்பிட்டால் ஆயர்க்காய்க், கூச்சலிட்டால் ஆனைக்காய்ச்,
சாப்பிட்டால் நட்புக்காய்ச், சோர்வின்றிக் -காப்பிட்ட,
ராதை கரம்விலக்கிக், கீதை உரைநிறுத்தி,
ஆதரவுக்(கு) ஓடும் அரி”….கிரேசி மோகன்….
—————————————–
’’பாம்பின் தலைமேல் படமொடுங்க ஆடிடும்
மாம்பழ வாயா, மதுராவின், -ஆம்பிளை,
சிங்கமே, வெல்லமே, சீராயர் செல்லமே
வங்கக் கடல்கடைந்தோய் வா’’….கிரேசி மோகன்….
2015-07-20
”உஷ்ணத்தின் முன்னே உருகும் பனிபோல,
நஷ்டத்தைப் போக்கும் நிதிபோல்ஸ்ரீ, -முஷ்ணத்தின்
ஆண்டவன் சாமிகள் ஆசீர் வதிக்கும்முன்,
வேண்டுதல் விஷ்ணுசெ விக்கு”….கிரேசி மோகன்….
’’தூங்கும்முன் தோன்றியது’’….
——————————————————
‘’வேண்டுதல் வேண்டாமை விட்டு நமக்காக,
பூண்டவர் காஷாயப் போர்வையை, -ஆண்டவன்:
சாங்கிய மானவர், சன்னிதி சென்றுவந்தேன்,
தூங்கும்முன் தோன்றிய தால்’’….கிரேசி மோகன்….
KRISHNA FOR TODAY….
————————————-
”அரியா தவனை, அறியா தவரே,
அறிய முயல்வர் அறிவால்: -எரியா(து),
ஒளிந்த நெருப்பை உணர மரத்தைப்
பிளந்த குருடனைப் போல்”….கிரேசி மோகன்….
KRISHNA FOR TODAY….
—————————————–
”எதற்கென்ற கேள்வி முதற்கொண்டு மாயை
உதிக்கின்ற ஞானமே எல்லாம் -மதித்துத்
துதிக்கின்ற நானும் விதிக்கின்ற நீயும்
நதிக்கரை நாணல்நீர் நட்பு”….கிரேசி மோகன்….
crazy mohan: “தூங்கும் முன் தோன்றியது “….”பார்த்தன் பார்த்த விச்வருபத்தை ,பார்வையற்ற திருதராஷ்டிரன் சார்பாக சஞ்சயனும் பார்த்தான் ….இதுதான் “குருட்டு அதிர்ஷ்டம் ” என்பதோ ….!கிரேசி மோகன் ….
நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்குப் பாய்வதும் குருட்டு அதிர்ஷ்டம் தானே..
—————————————————
”நெல்லுக்குப் பாய்ச்சிய நீரோடி, கூடிவளர்,
புல்லுக்கும் பாயுமாப்போல், பாண்டவ, -வில்லுக்(கு),
இருட்டினைப் போக்க கிருட்டிணன் காட்டல்,(விஸ்வரூப தரிசனம்)
குருட்டதிர்ஷட மல்லசத்சங் கம்’’….கிரேசி மோகன்…
2015-07-17
—————————————–
”கறவைக்(கு) இடமளிப்பு கண்ணன் மடியில்,
பறவைக்கு(கருடன்) வாகன பாக்யம், -சிறைவைத்த,
துஷ்டன்(கம்சன்)வை குண்ட துவாரத்தின் பாலகன்,

”தூங்கும் முன் தோன்றியது”….
—————————————————————-
”கண்டேன் கடவுளை”
—————————————–
”காணாத காட்சியில் நானாக நானின்றி
தோணாத சிந்தையில் தோய்ந்திட -தானாக
கையில் கனியாய்க் கடவுளைக் கண்டேன்நான்
நெய்யிருக்கும் பாலில் நுழைந்து”….(1)….
எய்த அம்பிலும் ,கொய்த தலையிலும்
பெய்த மழையிலும், பத்தினியாள் -வைதலிலும்
செய்த செயல்களிலும், சிந்தனைப் போக்கிலும்
தெய்வதம் கண்டேன் திகைத்து….(2)….
”ஏழை சிரிப்பிலும் ,கோழை சிலிர்ப்பிலும்
வாழ வழியற்றோர் வாகையிலும் -பாழும்
கொடுவினை வந்தும் கலங்காதோர் நெஞ்சில்
கடவுளைக் கண்டேன் களித்து”….(3)….
”காலை மழலையில் ,மாலை கிழவனில்
சேலை இரவு சுகத்தில் -தோலாம்
உறையைத் துறக்கும் உயிரினில் கண்டேன்
இறையின் இரவல் இருப்பு….(4)….
காற்றில் கலந்திடும் கந்தகம் -ஏற்றம்
இகழ்ச்சியின்றி ஈசன் இருப்பதைக் கண்டேன்
மகிழ்ச்சியில் துக்கம் மறந்து”….(5)….கிரேசி மோகன்….
2015-07-16
தள்ளுகிறான் ராகத் துவேஷத்தை, -வல்லானே,
தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்(பிருந்தாவனம்),
படைத்தாய் பிறவிப் பிணியை, -இடைப்பையா,
தீராவுன் ஆட்டத்தில், தோள்கொடுக்கும் தோழனெனைப்,
பாரா திருப்பதேன் பகர்’’….கிரேசி மோகன்….

”மெல்லிசை மன்னரவர், மேலிசை மன்னராய்,
தொல்லுலகை விட்டகன்று, தெய்வங்கள் , -சொல்லசைவு,
ஓங்காரத் திற்(கு)உயர், ஓசை கொடுத்ததை(மெட்டமைத்து),
ரீங்காரம் செய்யப்போ னார்”….கிரேசி மோகன்….
கல்லசைந்து கொட்டிடும் கற்பகமாய், -மெல்லிசை
மன்னரவர் மெட்டுக்கு, கின்னரரும் நாணுவரே:
WINNERரவர் எம்MS V”….கிரேசி மோகன்….
நேசிப்பைக் கண்டு நெகிழ்ந்ததால், -ஸ்வாசிப்பை,
வேடனம்பு கொண்டவுடன், வைகுண்டம் செல்கையில்
மாடணைந்து செல்கின்றான் மால்’’….கிரேசி மோகன்….
வேடன் அம்பு -ஜரா வேடன் அம்பு மாடு வருடும் அதே
பாதத்தில் பட்டு கிருஷ்ணாவதாரம் முடிகிறது….
பாதம் வருடும் பாதசாரி மாடு பார்த்தசாரதியோடு
பரமபதம் பயணிக்கிறது….சபாஷ் கேசவ்….
2015-07-15
’’தூங்கும்முன் தோன்றியது’’….
——————————————————
‘’வேண்டுதல் வேண்டாமை விட்டு நமக்காக,
பூண்டவர் காஷாயப் போர்வையை, -ஆண்டவன்:
சாங்கிய மானவர், சன்னிதி சென்றுவந்தேன்,
தூங்கும்முன் தோன்றிய தால்’’….கிரேசி மோகன்….
2015-07-14
——————————————————-
”காற்றுள்ள போதினிலே தூற்றிக்கொள், இல்லையேல்,
கூற்றது வந்தாவி கொண்டுபோய், -வேற்றுரு,
ஆக்கும், அதற்குள்ளே, ஆன்ம விசாரத்தால்,
போக்குன் பிறவிப் பிணி”….கிரேசி மோகன்….
…………………..
கண்ணன் அனுபூதி எழுதிய சந்தோஷத்தில் மால்மருகன் முருகன் வெண்பாக்கள் ”கந்தன் களிப்பு” என்ற தலைப்பில் எழுதிமேன்…நாளை செவ்வேளுக்கு உகந்த செவ்வாயாய் இருப்பதால் பகிர்ந்து கொள்கிறேன்….இத்துடன் அடியேன் வரைந்த ”முருகர்” படத்தையும் இணைத்துள்ளேன்….கிரேசி மோகன்….
கந்தன் களிப்பு
——————-
ஒயிலாய் குறத்தி ஒருபக்கம், வேழ
மயிலாள் மறுபக்கம் மேவ -மயிலம்
அமர்ந்த முருகா அருள்வாய் எனக்கு
திமிர்ந்த ஞானத் துணிவு….(1)….
மோனை எதுகையாய் ஆனை குறவள்ளி
மானை மணந்த தமிழழகா -சேனை
தளபதியே சூரன் தலைபறித்த சூரா
உளமதிலே உட்கார் உவந்து….(2)….
வள்ளி மகளோடு புள்ளி மயிலேறும்
வெள்ளி மலையோன் விழிமைந்தா -உள்ளிருக்கும்
ஆன்ம குகனே அகந்தை அழித்தெனக்கு
வான்வசம் ஆக்கிட வா….(3)….
விடையேறு பாகன் விழிவந்த வேலா
படையேறி வாழ்கின்ற பிள்ளாய் -கடையோரம்
வைத்தேன் கவியெழுதி விற்றுன் அனுபூதி
துய்த்தேன் தமிழ்வணிகத் தில்….(4)….
உடைந்தாலும் கண்ணாடி உள்ளதைக் காட்டும்
குடைந்தாலும் கற்பாறை கோயிலாகும் -அடைந்தாலும்
ஆறு கடலைத்தான் சேறும் அதுபோல
ஏறு மயிலோன்கண் ஏகு….(5)….
பாம்பன் ஸ்வாமிகள் கோயில்….
—————————————-
உப்பு மிளகிட்டு சுப்பனின் சன்னிதியில்
தப்புத்தப்(பு) என்றுகன்னத் தாளமிட்டு -அப்புறம்
பாம்பன் சுவாமிகள் பாதம் பணிந்தளிக்கும்
சாம்பலை நெற்றியில் சூடு….(6)….
பாம்பணைப் பள்ளிப் பெருமாள் மருகோனைத்
தாம்புனைந்தார் சந்தத் தமிழ்கொண்டு -பாம்பன்
குமர குருதாசர் கூறு கவசம்
அமரநிலை சேர்க்கும் அமுது….(7)….
சாம்பவி புத்திரனே சம்பு புதல்வனே
மாம்பழ வாயன் மருகோனே -பாம்பன்
அடிகள் அழைக்க அழகுமயில் ஏறி
சடுதியில் வந்தோய் சரண்….(8)….
தந்தைக்கு மிக்கதோர் மந்திரம் கூறிய
எந்தையே ஏரகக் கந்தனே -முந்தைப்
பழவினைகள் போக்கி புதுவினைக்கு ஞானக்
கிழவனாய் வந்தெனையாட் கொள்….(9)….
ஆறு முகம்கொண்டோய் ஆறு படைநின்றோய்
கோறும் அடியார் குறைதீர்க்கும் -மாறுபடு
சூரனைக் கொன்ற சுரமகள் கேள்வனே
பாரெனைத் தாயாய் பரிந்து….(10)….
கந்தா குஹாகடம்பா கார்த்திகே யாவென்று
உன்தாள் பணிந்து உவப்புடன் -அந்தாள்
அருணகிரி போலே வருணகவி பாட
தருணமிது தாராய் தமிழ்….(11)….
அண்ணா மலைதீபம், உண்ணா முலையுந்தி
விண்ணாளும் தேவர்தம் வெற்றி -எந்நாளும்
காப்பதற்குக் கையில் கதிர்வேல் கொண்டவனாம்
தீப்பொறி தோற்றத்தைத் தொழு….(OR)….
தீப்பொறி தோற்றத்தில் தோய்….(12)….
தை பூசத்தன்று எழுதியது….
———————————–
மைபூசும் மாதர்வாய் பொய்பேசப் புல்லரித்து
கைகூசும் காலம் கலவிடுவாய் -தைபூச
நன்நாளின் தெய்வத்தை நெஞ்சில் நிறுத்திடுவீர்
பண்ணாத பாவமும் பாழ்….(13)….
அறுபடையோன் புகழ்….
——————————————
திருவேரகம்(சுவாமி மலை)….
————————————-
குந்திக்கால் மண்டியிட்டு கூப்பியக் கைகொண்ட
தந்தைக்கு சொன்ன தனயனை -சிந்தைக்குள்
வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு
ஏரகச் செல்வனை ஏத்து….(14)….
பழமுதிர்சோலை
——————–
கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும்
தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால்
கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க
பழமுதிர் சோலைக்குள் புகு….(15)….
திருத்தணி
————–
விருத்தனாய் வந்து குறத்தியைக் கூடி
திருத்தணி மேவும் தலைவா -மருத்துவன்
வைதீஸ் வரன்பெற்ற வேலா யுதாவாழ்வில்
பொய்தீசல் சேராது போக்கு….(16)….
திருச்செந்தூர்
——————-
மாறுபடு சூரனுடல் வேறுபட வேலெய்து
கூறுபட வைத்த குருநாதா -சீறுகடல்
செந்தூரில் பத்தினிகள் சேர வளர்ந்திடும்
சிந்தூர வண்ணனைச் சேர்….(17)….
பழனி
——–
மாம்பழம் தந்தை மறுத்ததால் கோபித்து
தீம்பிழம் பாகி தவக்கோலம் -நாம்பழனி
குன்றினில் கண்டு களித்திட காட்சிதரும்
நின்றிடும் ஆண்டி நமக்கு….(18)….
திருப்பரங்குன்றம்
———————–
குரங்கென்ற நெஞ்சோடு கூடிக் குலாவி
தரங்குன்றி தாழ்ந்தோம், தவித்தோம் -பரங்குன்றில்
தெய்வானை கைப்பிடித்த தேவ சகாயனை
கைவாய்மெய் கொண்டு கருது….(19)….
சுரமகள் அத்தி குறமகள் வள்ளி
இருபுறம் சுத்தி இழைய -அறுபடை
வீட்டில் வசித்திடும் வேலா மயிலேறி
பாட்டில் வருவாய் பறந்து….(20)….
கண்ணனுன் காதலன் கந்தனுன் காவலன்
எண்ணனும் நெஞ்சேநீ எந்நாளும் -முன்னவன்
மாலனும் பின்வந்த வேலனும் நம்வாழ்வில்
காலமும் நேரமும் காண்….(21)….
மயிலவர்க்கு கொண்டை மயிலிவர்க்கு அண்டை
சயிலம் இருவர்க்கும் ஜாகை -துயிலிருப்பார்
வேலையில் மாலவன் வேலனோ தீயோர்மேல்
வேலை விடக்கண் விழிப்பு….(22)….
சரவணா கேளாய் ஒருவினா ஞானம்
பெறவொணா வண்ணமேன் பெற்றாய் -குருவெனால்
சீடன் தவித்திருக்க சும்மா இருப்பதோ
பாடமனு பூதி புகட்டு….(23)….
கரம்தாங்கும் வேலும் புறம்தாங்கும் நீல
நிறம்தாங்கும் வண்ணமயில் நோக்கும் -அறம்தாங்கும்
ஆறு முகமும் அணிசேவல் கொக்கரிப்பும்
கூறு தமிழ்மொழியும் காப்பு….(24)….
சிலம்பும் சிலம்பணி செவ்வேள் கழலும்
புலம்பும்புள் சேவலும் போகக் -கிளம்பத்
தயாராக நிற்கும் தணிகைவேல் நீல
மயூரமும் எண்ண முருகு….(25)….
மலையளவு குற்றமும் மங்கிடும், பொங்கும்
அலையுலவு செந்தூர் அழகன் -சிலையுருவை
எண்ணித் துதிப்போர்க்கு ஏத்திப் புகழ்வோர்க்கு
நுண்ணிய நூலாய் நலிந்து….(26)….
கதிராய் வெளிப்பட்டு கார்த்திகை மாதர்
உதிர முலைப்பாலை உண்டு -அதிரும்
அயில்வேலை அன்னை அளித்திட வாங்கும்
துயில்வோன் மருகன் துணை….(27)….
சொந்தம் எனக்குநீ பந்தம் எனக்குநீ
தந்தை எனக்குநீ தாயாராய் -வந்தருள்
பாலிக்க வேண்டும் பராசக்தி பாலனே
காளிக்கை வேலனே காப்பு….(28)….
எண்ஜாண் உடம்புக்கும் ஏகாக்ர சிந்தைக்கும்
பஞ்சா மிருதமும், பண்ணிரெண்டு -கண்ஜாடைக்
காதலும் போதுமே, ஆதலால் கந்தனின்
மீதுலாவு நெஞ்சே முனைந்து….(29)….
சந்தமிகு செந்தமிழில் கந்தரனு பூதியை
தந்த அருணகிரி தான்போலே -உந்தன்
திருப்பதிகள் சென்று திருப்புகழ் பாடும்
விருப்பதை நேர்நிறை வேற்று….(30)….
அய்யோ எனக்கிளை குய்யோ முறையிடாது
அய்யோ மணாளர் அணுகும்முன் -மெய்யோடும்
தேகான்ம பாவத்தை தாண்டி நிலைபெற
வாகா னவழிசொல்ல வா….(31)….
புரியும் தொழிலெனக்கு பொல்லாத சூரன்
சரியும் படிவேல் செலுத்தும் -அரியின்
சகோதரி மைந்தனின், சங்கரன் சேயின்
மகோதரன் தம்பியின்த மிழ்….(32)….
முதற்பொருளை ஈசன் நுதற்பொருளை வள்ளிக்(கு)
இதப்பொருளை சந்த இசைக்குப் -பதப்பொருளை
மாறா ஸ்திதப்பொருளை மாறன் கதைப்பொருளை
வீரம் விதைப்பொருளை வாழ்த்து….(33)….
பொய்பேசா வாக்கும் புறங்கூறா வார்த்தையும்
கைகூசா காரியமும் கொள்வோர்கள் -தைபூசத்
தானருளால் நற்கதியும் தேயா துருவனைப்போல்
வானுருளும் மீனாகு வர்….(34)….
உதித்ததது தீயாய் உருமாற்றம் சேயாய்
பதித்ததது பொய்கையில் பாதம் -துதித்த
நதித்தலை ஈசர்க்(கு) உதிர்த்ததது ஓமை
விதித்ததை மாற்றுமது வேல்….(35)….
வம்பை விலைகொடுத்து சம்பு விடம்வாங்கி
தெம்பிழந்து மன்மதன் தீய்ந்ததோர் -சம்பவத்தில்
திண்டாடும் தேவர்க்காய் உண்டான பிள்ளையை
கொண்டாடக் கைகளைக் கூப்பு….(36)….
மனத்துள்ளான் பூச தினத்துள்ளான் வள்ளி
வனத்துள்ளான் சூரன்மேல் வைத்த -சினத்துள்ளான்
அண்ட கனத்துள்ளான் ஆதி கணத்துள்ளான்
விண்ட ஷணத்துள்ளான் வேல்….(37)….
ஆனைக்(கு) இளையானை ஆனைக் களியானை
ஆணை அமரர்க்(கு) அளிக்கின்ற -ஆணை
வணங்கி எழுவானை வள்ளிகல் யாணம்
இணங்கிய யானை அணைப்பு….(38)….
அய்யம் தகளியா ஐந்துபுலன் நெய்யாக
பொய்யாம் விளக்கேற்றப் போந்தேனே -அய்யா
விளக்குமாறு என்னை விலக்கிடாது உன்னை
விளக்குமாறு வெண்பாவில் வா….(39)….
சுட்ட பழமா! சுடாத பழமாவென்(று)
இட்டனை அவ்வைக்(கு) இடையூறு -கொட்டினை
நாவல் பழத்தை நமுட்டு விஷமமாய்
சேவல் கொடியோய் சிரித்து….(40)….
வீசும்வெண் சாமரம் பேசும் தமிழுனக்கு
ஆசு கவியாகி ஆறுதிவ்ய -தேசமும்
கூடி அருண கிரியாகி சந்தத்தில்
பாடிக் களிக்கலாம் போது….(41)….
வயதுமிக சேர்ந்தும், வயோதிகம் நேர்ந்தும்
தயவை எதிர்பார்த்து தாழ்ந்தும் -அயர்வில்
கரணங்கள் ஓய்ந்தும் கலங்காது கந்தன்
சரணங்கள் பற்ற செழிப்பு….(42)….
பசித்தால் உணவு, படுத்தால் கனவு
நசித்தால் நமனார் நினைவு -அசத்தே!
இதற்குமேல் ஒன்றுண்டு இன்னதென்றால் ஆதி
முதற்கதன்பேர் ஆறு முகம்….(43)….
மண்டை தகளியா மானசீக நெய்யூற்றி
குண்டலினி ஜோதி கொளுத்திட -தண்டை
செறிகழல் சந்தம் செவிகளில் கேட்க
விரிகுழல் வள்ளியுடன் வா….(44)….
கோபுரமீ தேறி குதித்த அருணகிரி
தாபஜுரம் தீர்த்து தடுத்தாண்டு -நாபுறத்தில்
முத்தென வேலின் முனையால் எடுத்தளித்தோய்
புத்தென்னுள் பாம்பாய் புகு….(45)….
பாலூட்டும் அன்னையிடம் வேலூட்டம் பெற்றதனால்
மாலாட்டும் பீலி மயிலேறி -தேளாட்டம்
கொட்டுகின்ற சூரனை கூறாய் வகிர்ந்திட
விட்டகலும் தாய்ப்பாலை வேல்….(46)….
குகையாம் மனதில் குடியேறி கந்தா
புகைஐம் புலனை பொசுக்கு -பகையாம்
எனைப்போய் விரட்டி எனக்கு பதிலாய்
உனைப்போல் குடித்தனமாய் உய்….(47)….
வெந்த உளப்புண்ணில் வேலினைப் பாய்ச்சிமா
சந்தத் தமிழ்மலையாய் செப்பனிடு -கந்தன்
கடம்பன் குகனென்று காலமெல்லாம் கூவ
உடம்பை ஒயில்மயிலாய் ஓட்டு….(48)….
சாத்திரம் கற்றும் சதுர்வேதம் ஓதியும்
தூர்த்தெரி காட்டில் துடைத்தெறிவர் -நேத்திரம்
தன்வழி சேயை துதிப்போர்கள் இப்பிறவிப்
புண்வழிபோய் வாரார் பிறந்து….(49)….
காவலுக்கு வேலுமறை கூவலுக்கு சேவலும்
தாவலுக்கு வண்ணமயில் தோகையும் -ஆவலுக்கு
வள்ளியும் சீவலுக்கு வீரமும், கேவலம்நான்
எள்ளி நகையாட ஏன்….(50)….
ஈசான்ய மூளை இருந்து புறப்பட்டு
தீசார்ந்த சேயை, தினைப்புன -பூசாய்ந்த
மார்பனை தேவர்கள் சார்பனை பாவலர்கை
நூற்பனை நுண்பொருளை நண்ணு….(51)….
உடலே சதமென்(று) உனைநான் மறந்து
திடலாம் கிளர்ச்சியைத் தாண்ட -அடடா
திடலாடி பள்ளமாய் திடீரென்று ஆச்சே
கடலாடி கந்தனே காப்பு….(52)….
வேகாத வெய்யிலில் வேகா ததையுண்டு
வேகாதி வேகத்தில் வேண்டுதலாய் -போகாதே
கோயில் குளமென்று ! குன்றாடும் கந்தனை
வாயில் வளர்வெண்பா வாய்….(53)….
முருகா எனச்சொல்லி மூச்சை இழுமால்
மருகா எனமுடக்கு மூச்சை -குரு!கா
எனவோதி மூச்சை மனதின்றி விட்டால்
உனதாயுள் கந்தர்க்(கு) உவமை….(54)….
கரும்பில் சுவையாய் இரும்பில் சுமையாய்
வெறும்புல் விரிப்பில் வனப்பாய் -துரும்பிலே
மாயமாய் தூணிலே சீயமாய் வானிலே
மேயும் ஒளிக்கூட்ட மாய்….(OR)
வேயும் பரவெளியாய் வேல்….(55)….
தடந்தோள் முதல்வன் தமிழ்த்தாய் புதல்வன்
மடந்தை இருவர் மணாளன் -விடம்தோய்
கழுத்தர்க்(கு) உரைத்தான் எழுத்தை குருவாய்
வழுத்தி வணங்குவோம் வேல்….(56)….
பெண்டாண்டு பொய்பேசி பாழ்மது மாமிசம்
சண்டாளர் நட்பால் சகித்துண்டு -பண்டாய
வேதங்கள் போற்றும் பாதம் பணிந்திலேன்
ஏதம் பொறுத்தருள்வாய் ஏற்பு….(57)….
சொன்னால் வினையழியும் பின்னால் பிறப்பொழியும்
முன்னால் விலகும் மரணபயம் -முன்னாளில்
தாரகனை மாய்த்த தணிகையான் நாமத்தை
கூறகம் பூரிக்கக் கூவு….(58)….
இக்கா சினிக்கிங்(கு) இருப்பொன்றும் இல்லை
முக்காலே வீசம் முழுமாயை -நிக்காதே
இன்றே அறுபடை இல்லத்திற்(கு) ஏகிடு
நன்றே நடக்குமிதை நம்பு….(59)….
அற்பமாய் மாதர் அழகில் மயங்கிநம்
கற்பினைத் தோற்றோம் கசடறாய் -வெற்பிலே
பூக்கும் முருகனால் புண்ணியம் தேடுவோம்
காக்கும் கனகவேல் கை….(60)….
நன்றுலர்ந்து தீது நமைவாட்டும் நேரத்தில்
அன்றலர்ந்த பூவால் அருச்சிப்பாய் -கன்றலைந்த
கோகுல மாமனார் கொண்டமாப் பிள்ளையை
ஆகுலம் தீர்ப்பான் அவன்….(61)….
அஞ்சரி யாசனத்தை ஆளத்தேர் மாமனின்
குஞ்சரிப் பெண்ணின் கரம்பிடித்த -நெஞ்செரி
கண்டரின் தீநுதற்க் கண்பிறந்த கந்தனை
கண்டறியும் ஆவலே காப்பு….(62)….
மாலோலன் பெற்றபின் மண்ணில் தவழவிட்ட
ஆலோல வள்ளி அகமுடையான் -கோலோடு
தென்பழனிக் குன்றில் திகம்ப ரனாய்நிற்போன்
முன்கழுவிக் கொள்மும் மலம்….(63)….
கோதையின் கைப்பிடித்த யாதவத்தாய் மாமனின்
சோதரி பால்குடித்த சண்முகனை -சூதறி
யாதபுத்தி யால்தொழுது ஆதரிப்போர்க்(கு) ஆயுளுக்கும்
வாதபித்த ஜன்னி விலக்கு….(64)….
அரியின் திகிரியை அன்றுண்(டு) உமிழ்ந்த
கரியின்பின் வந்த குமாரா -சரியை
கிரியை அறியா கசடன் எனக்கு
நெறியை நினைவில் நிறுத்து….(65)….
பார்வதி துர்கா பரமேஸ் வரிதந்த
நேர்கதி செல்லும் நெடுவேலால் -சூர்விதி
தீர்த்தவனை சேவலாய் தோகையாய் தன்னுடன்
சேர்த்தவனை செந்தூரில் சேர்….(66)….
ஆனை துரத்திய மானை மருவிய
மோனை எதுகை மொழிமுருகா -”நானை”
தனித்துப் பிரித்து திருத்தும் ரமண
ஜனிப்பே அருணா சலா….(67)….
ஊசித் துளைக்காதில் ஒட்டகம் போய்வரும்
யோசித்த குப்பையும் யாப்பாகும் -நேசித்து
யாசித்து நிற்பான் எதிரியும் கைகட்டி
பேசிப்பார் கந்தன் புகழ்….(68)….
கணிகையர் கூடி பிணிவினையில் வாடி
இனிதுயிரை தற்கொலைக்(கு) ஈய -தணிகையான்
துள்ளிக் குதித்தவனை தாங்கிப் பிடித்துரைத்தான்
பள்ளித் தலம்சென்று பாடு….(69)….
கந்தர் அலங்காரம் கந்தன் அனுபூதி
தந்த அருணகிரிக்(கு) ஈடாக -கந்தன்
களிப்பமைய வேண்டி கைகூப்பு கின்றேன்
பலித்தலை கால்பாது காப்பு….(OR)
களிப்பயல் கண்ணனே காப்பு….(70)….
வேதாள பூதங்கள் பாதாள பாம்புகள்
தீதாளும் மானுடத் துன்பங்கள் -சேதாரம்
ஆகிடும் சக்தியின் அன்புமகன் கட்டளைக்கு
ஏகிடும் வேல்முன் எதிர்ப்பு….(71)….
தந்தை சுமந்தவன் தாயால் வளர்ந்தவன்
விந்தையச் சேயை வணங்காது -மொந்தையில்
கள்ளுண்டு மாதரார் காமநெறி கொள்ளாதே
முள்ளுண்(டு) எறியாய் மலர்….(72)….
கூனல் முதுகோடு காணல் குறையோடு
தோணல் எதுவுமின்றி தூங்காதே -போநல்
உபதேசம் தந்தைக்(கு) உரைத்தவெகு ஞான
மக(ன்)தேசம் சாமி மலைக்கு….(73)….
வேசை புலன்காட்டும் ஆசைப் பனிமூட்டம்
காசைக் கரியாக்கிக் கண்மூடும் -ஓசை
இடும்கந்தன் தண்டை இணையடிகள் பற்றி
திடம்கொண்டு தீர்ப்பாய் தினவு….(74)….
தள்ளாத காலம் தடியூன்ற இல்லத்தோர்
செல்லாத காசாக்கி சுண்டிடுவர் -பொல்லாத
புத்தியே கந்தன் புராணம் படித்திடு
நெத்தியை நீறால் நனைத்து….(75)….
கல்லிரும்பு கூர்வயிரம் கொண்ட கடினமெலாம்
புல்துரும்பாய் போய்வெட்கும் பார்மனம்முன் -வல்லியயிச்
சூரன் பொடிபட சீறிடும் வேல்திருச்செந்
தூரன் வழிக்குத் திரும்பு….(76)….
நீர்கொழித்த மண்ணில் நடுமரம் ஓங்குதலாய்
ஆறெழுத்தைக் கூறி அனுதினமும் -தேரிழுத்து
தீதொழித்த பாண்டவ தூதன் மருகனை
போதழைக்கப் பொங்கும் பலம்….(77)….
ஆவீர் அனைத்துமாய் ஆனதெல்லாம் போனதும்
சாவீர் ஜனிப்பதற்கு ஜென்மங்காள் -போவீர்
கயலூறும் பொய்கை வயலூரில் வாழும்
பயலாறைப் பார்க்கப் பலன்….(78)….
தலைப்பாகை கொண்ட மலைப்பான வாழ்வை
கலைப்பானே கூற்றன், கிராதகி -முலைப்பாலை
முட்டக் குடித்திடும் மாமன் மருகோனை
எட்டுக் குடிசென்று ஏத்து….(79)….
சூடுவாய் கொட்டாய் சுடச்சுட வார்த்தைகள்
சூடுவாய் பூனையாய் வாடுவாய் -சூடுவாய்
கந்தர் அலங்காரம் கந்தன் அனுபூதி
அந்த வெறிவாய்க்(கு) அவல்….(80)….
ஆத்தின்மேல் சோத்தின்மேல் கூத்தியார் கொங்கைமேல்
பூத்துக் கசங்காதே புல்நெஞ்சே -நூத்தின்மேல்
பாண்டவர் கொண்ட பகைதீர்த்தோன் பெண்ணுக்காய்
வேண்டும் மருமகன்மேல் வை….(81)….
என்னதான் செய்வது ஏரகச் செல்வனே
முன்னதாம் கர்மம் மயக்குதே -பின்னதாய்
வந்தயிவ் வெண்பாக்கள் உந்தனருள் ஆகட்டும்
சொந்த சரக்கென்றால் சோர்வு….(82)….
தாமரையாள் தங்கும் தடந்தோள் மணிமார்பன்
மாமறைகள் காத்தோன் மருகனே -”யாமிருக்க
அச்சமேன்” என்றபய ஆறுதல் தந்தவனே
உச்சரிப்பாய் என்னுள்ளே ஓம்….(83)….
தொட்ட குறைகுறைய விட்ட நிறைபெருக
பட்ட துயரகல போய்ச்சென்று -கஷ்டமொடு
அண்டி வருவோர்க்கு வண்டி அருள்குவிக்கும்
கண்டி கதிர்காமம் காண்….(84)….
கேட்ட தெலாம்கொடுக்கும் கேளா தனகுவிக்கும்
மாட்டேன் எனச்சொல்லா, மூடுபனி -மூட்டக்
கயிலை கபாலியும் கற்பகமும் கொஞ்சும்
மயிலை முருகன் மனம்….(85)….
உறிவள வெண்ணை உருகுநெய் பாலை
திருடுமுள மாமனின் தொண்டாய் -கிரிவலமாய்
சித்தம் ஒருமித்து செவ்வேள் மருகனின்
ரத்தி னகிரியைநீ சுத்து….(86)….
விண்வெற்றி கொள்ளவும் வீணரைக் கொல்லவும்
முன்நெற்றிக் கண்ணுதித்த மூலத்தை -பின்பற்று
பெண்கண் பொழிகின்ற போகத்தைப் பாராது
எண்கண் தரிசனத்திற்(கு) ஏங்கு….(87)….
பூண்டியில் ஈசனை பூஜித்த ஈராறால்
ஆண்டியே என்னை அணைத்தருள -பாண்டவ
பாஞ்சாலி மானத்தைப் போர்த்திய மாலவனின்
வாஞ்சை மருகோனே வா….(88)….
பணிக்கூனி யாலன்னை போவென்ற வாக்கை
அணிந்தா ரண்யம் அடைந்து -கனியை
இடகிழவி உண்ட இராமன் மருகோன்
வடபழனி செல்வோம் வா….(89)….
பாலை சரவணப் பொய்கைமார் போட்டிட
வேலை பராசக்தி வார்த்திட -ஆளாய்
உருமாறி பக்தர்க்(கு) உதவிடும் அன்புப்
பெருவா ரிதிக்கில்லை பூட்டு….(90)….
புள்ளி மயிலேறி பக்தர்க்(கு) அருள்வேலை
”துள்ளி வருகுதென” தோத்தரித்த -வல்லியூர்
பாரதிக் கண்ணனின் பாச மருகோனே
நேரெதிராய் வந்தென்முன் நில்….(91)….
தமிழ்வேலை சந்தம் உமிழ்வேலை சங்கம்
கமழ்வேலை ஈராறி கைகள் -தவழ்வேலை
காக்கும் அயில்வேலை நோக்க ஒயில்வேலை
தீக்கண் பயல்வேலை தீண்டு….(92)….
காற்று புகாகுகையில் கைதான நக்கீரர்
போற்றிப் புகழும் திருமுரு -காற்றுப்
படைநா யகன்வேற் படைதனை வீச
தடைவெற்(பு) அடைவு தரை….(93)….
சமாதான மான உமாதேவி ஈசர்
குமாரனின் சம்பவம் காண -இமாசலக்
கல்யாண பாரத்தைக் கொண்ட அகத்தியரின்
தொல்ஞான தேசிகனைத் தேடு….(94)….
நீராடிக் கார்த்திகையில் நீறாடி நேர்த்தியாய்
நீராடிப் பாடி நெடுங்குன்று -தோராடி
அல்லும் பகலும் அருளும் அருந்தமிழ்ச்
சொல்லின் பொருளில் சுகி….(95)….
சூல்தாங்கும் ஈசனுடன் வேல்தாங்கும் சக்தியுடன்
கால்தாங்கும் தேவர் குழாமுடன் -மால்தாங்கும்
பீலி மயிலேறி பத்தினிகள் பக்கமுற
மேலிருந்து வாழ்த்தும் முருகு….(96)….
நாதனை நான்முகன் வேதனையை ஈசர்க்கே
போதனை செய்த பிரணவத்தை -சேதுஅணை
கட்டிய மாமன்பெண் கட்டியமாப் பிள்ளையை
கட்டிப் பிடிக்கக் களிப்பு….(97)….
வேலனை ஈராறு தோளனை ஈசர்கண்
பாலனை வள்ளிமண வாளனை -மூலனை
முத்தமிழ் காவலனை முந்தியருள் ஏவலனை
உத்திரப் பங்குனியை உன்னு….(98)….
தலாப்பொருள் ஒன்று குலாவிடும் ஆறு
கலாமுகம் கொண்ட குமரன் -கலாப
மயிலேறி வள்ளி மகளானை சூழ்ந்த
ஒயிலோன் திருப்புகழ் ஓது….(99)….
சுராபதிச் சேனை உறாபகை வண்ணம்
கராதலம் வேல்கொண்ட கந்தா -பராபரைக்(கு)
உற்ற குமரனே பற்றினேன் பாதத்தை
சுற்றிவ ரச்செய் சபை….(100)….
கண்களை மூடிக் களித்திருந்தேன் -கண்ணனே
மாமனெனை ஒத்த மருகனிவன் என்றதால்
காமவேள் கந்தன் களிப்பு….(101)….

—————————————–
”ILL-LUCK , இனியில்லை, இம்மைக்குப் போட்டியாய்,
மல்லுக்கு நிற்கும் மறுமைகாண், -கல்லுக்குள்,
தேரையை வைத்தற்கு நீரையும் பாய்ச்சும்அக்
காரய்யன் கண்ணன் காப்பு’’….கிரேசி மோகன்….
இம்மை-இகசுகம், மறுமை-மோக்ஷம்….
அக்காரய்யன் -வெல்லம் கரும்பு போல் தித்திப்பானவன்….

2015-07-13
ஆடகச் செம்பொன்னார் மேனியரே ’’ஆட வருகவே’’….
———————-
முனிவர்கள் கூடி மெளனம் காத்திட
தனி ஆவர்த்தனம் நந்தி முழங்கிட
பனி மலை வாசன் பார்வதி யுடனிம்
மனிதனில் தாண்டவம் ஆட வருகவே….(1)
முகார விந்தம் முறுவல் பூத்திட
அகார,உகார,மகார அம்பிகை
அகோர மூர்த்தியை அணைத்து என்மன
விஹாரில் தாண்டவம் ஆட வருகவே….(2)
துந்துபி முழங்க டமருகம் ஒலிக்க
கந்தன் கணபதி கைக்கட்டி நிற்க
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியென்
சிந்தையில் தாண்டவம் ஆட வருகவே….(3)
மாலவன் சங்க நாதம் ஊதிட
நாலு முகன் நல்வேதம் ஓதிட
ஞால அன்னையும் அப்பனும் எந்தன்
மூளையில் தாண்டவம் ஆட வருகவே….(4)
யாழில் பாரதி ஏழிசை சுரக்க
வாழிய கோஷம் வைதேஹி போட
ஊழி முதல்வனும் உமையும் எந்தன்
தோளில் தாண்டவம் ஆட வருகவே….(5)
பாக்கு வெற்றிலைப் போன்று இணைந்த
தேக்கு மேனியரும் தளிர் இடையாளும்
பாக்கள் பூக்களாய்ப் புலர்ந்திட எந்தன்
வாக்கில் தாண்டவம் ஆட வருகவே….(6)
பாஸியும் நீருமாய்ப் பிணைந்த இருவரும்
தூசி தோஷங்கள் தொல்லை இராது
வாசிவாசியென சுவாசிக்க எந்தன்
நாசியில் தாண்டவம் ஆட வருகவே….(7)
தென்னாடுடையான் தன்தேவியுடன்
பெண்ணாடுடலொடு பாவியேன் நானுனை
மன்றாடுதலால் மனமிசைந்(து) எந்தன்
முன்னால் தாண்டவம் ஆட வருகவே….(8)
வேத புராண இதிகாசங்கள்
பாதச் சிலம்பில் பதிந்திடவே திரு
வாதிரையான் தன் வாமியுடன் என்
காதில் தாண்டவம் ஆட வருகவே….(9)
வாடிய பயிரென் வாழ்க்கையிலே நீர்
ஆடிய பாதராய் அழகுமையாளை
சூடிய வண்ணம் சேர்ந்தென் முன்னால்
ஜோடியாய் தாண்டவம் ஆட வருகவே….(10)
————————————————————
KRISHNA FOR TODAY….
——————————————
”பசு,பதி பாதம் பருக முடியாது,
அசுவ ரதஓட்டி ஆவின், -சிசுவாய்,
பதியவன் பாசம் பசுவுக்(கு) அளித்த,
சதியவன்லீ லாவோகே சவ்’’….கிரேசி மோகன்….
”அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்கா(து),
உழைக்கவரு வானவன் ஓடி, -மழைக்குக்,
குடையாய் மலையேந்தி, கோகுலம் காத்த,
இடையன் இணைப்பில் இரு”….கிரேசி மோகன்….
———————————————————————————————————————————————————————
“எம்பியுறி வெண்ணை, எடுப்பார்கைப் பிள்ளையவர் -
தம்பி பலராம தேவர்க்கு,-நம்பீசன், -
எட்டான் புலனுக்கு ,எட்டுவான் பக்திக்கு, -
எட்டினான்னின்(று) ஏழேழு ஏழு (777 )….கிரேசி மோகன் ….நன்றி கிரேசி கிரியேஷன்ஸ் AND கேசவ்
————————————–
”பத்மா சணமிட்டு பாதம் பசுவருட
சத்யவான் கண்ணனவன் சிம்மேந்த்ர, -மத்யமாவில்
சிந்திக்கிறான் தப்பிக்க, சிங்கமாய்ப் போயொளிய
எந்தத்தூண் ஏற்றது என்று”….
2015-07-10
——————————————————–
’’உடம்பின் அழற்சி, உலக சுழற்சி,
உடும்புப் பிடியாய் உலுக்க, -குடத்தை,
குருவித் தலைவைத்து கூத்தாடு கின்றேன்,
குருவித்த காயெனைக் கடவு’’….கிரேசி மோகன்….
கடவு -செலுத்து….
KRISHNA FOR TODAY….
——————————————
”அன்பே எதுகையாய், ஆர்வமே மோனையாய்,
உன்பால் தளையற்ற உந்துதலால், -வெண்பாக்கள்,
பாடிக்கை கூப்புகிறேன், வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
வாட